செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி அண்ணணை வெட்டி கொலை செய்த தம்பி

மாட்டுக் கன்றுகள் இறந்ததற்கு காரணம் அண்ணனும் அண்ணியும் செய்வினை செய்வது தான் என்று கூறி குமார் என்ற நபர் தகராறு செய்து வந்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2022, 12:37 PM IST
செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி அண்ணணை வெட்டி கொலை செய்த தம்பி title=

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சக்கிலி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வெங்கடேசன் வயது 45. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் கோயமுத்தூர், ஈரோடு பகுதிகளில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது தம்பி குமார் வயது 40. விவசாயி. குமார் இரண்டு மாட்டு கன்றுகளை வளர்த்து வந்தார். இரண்டு கன்றுகளும் சமீபத்தில் இறந்து விட்டன. 

மாட்டுக் கன்றுகள் இறந்ததற்கு காரணம் அவரது அண்ணனும் அண்ணியும் செய்வினை செய்வது தான் என்று கூறி குமார் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த அண்ணன் வெங்கடேசன் மற்றும் அண்ணி பெருமா ஆகியோரிடம் சென்று எனது மாட்டை செய்வினை வைத்து கொன்று விட்டீர்கள் என்று கூறி கையில் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் மண்டை பிளந்து வீட்டு வாயிலில் வெங்கடேஷன் சரிந்து விழுந்தார். 

மேலும் படிக்க | இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - நாமக்கல்லில் பயங்கரம்

தடுக்க வந்த அண்ணி பெருமா -வையும் குமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெங்கடேசன் பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

படுகாயத்துடன் பெருமா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெருமா ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தரராஜன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவான தம்பி குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார், இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News