ஆபாசமாக வீடியோ எடுத்து தமிழ் நடிகை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு

Crime News In Tamil Nadu: அடையாளம் தெரியாத இருவர் தன்னை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன் பணம் மற்றும் தான் அணிந்திருந்த நகையையும் கத்தி முனையில் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று துணை நடிகை புகார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 10, 2022, 08:32 PM IST
ஆபாசமாக வீடியோ எடுத்து தமிழ் நடிகை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு   title=

சென்னை வளசரவாக்கம் பகுதியில் பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள சினிமா துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். செவ்வாய் கிழமை இரவு துணை நடிகை வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்த்த போது கதவருகே 2 பேர் நின்று  இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரிப்பதற்குள் கதவருகே நின்றிருந்த இருவரும் நடிகையை தள்ளி விட்டு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் இருவரும் துணை நடிகையை கத்தி முனையில் மிரட்டி வீட்டில் வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தவர்கள். மேலும் அவர் அணிந்திருந்த சுமார் 4 பவுன் நகையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இந்த கொள்ளையின் போது கொள்ளையர்கள் இருவரும் துணை நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த துணை நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அடையாளம் தெரியாத இருவர் தன்னை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததுடன் பணம் மற்றும் தான் அணிந்திருந்த நகையையும் கத்தி முனையில் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், உதவி கமி‌ஷனர் கலியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம்குருஸ், சப்-இன்ஸ் பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இதில் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் 2 பேர் செல்வது தெரியவந்தது. 

மேலும் படிக்க: பலே திருடன்! யூடியூப் பார்த்து போலி சாவியை உருவாக்கி மெகா கொள்ளை

வீட்டு அருகில் கேமராக்கள் இல்லாத நிலையில் சற்று தூரத்தில் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இருவரின் உருவமும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. 

ராமாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் முதலில் அடையாளம் காணப்பட்டார். அவனை பிடித்து போலீசார் விசாரித்ததில் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரும் கண்ணதாசனும் சேர்ந்து துணை நடிகையின் வீட்டுக்கு சென்று கத்தி முனையில் கொள்ளையடித்ததுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

இருவரிடமும் போலீசார் சிறப்பு விசாரணை நடத்தியதில் அப்போது கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பமாக துணை நடிகை கத்தி முனையில் மிரட்டி கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!

துணை நடிகை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கண்ணதாசனும், செல்வக்குமாரும் அவரது வீட்டுக்குச் சென்று கொள்ளையடிக்க திட்டம் போட்டுயுள்ளனர். இதன்படி நேற்று இரவு இருவரும் துணை நடிகையின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்ததுடன் கத்தி முனையில் மிரட்டி கற்பழிப்பிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான செல்வக்குமார் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆகும். கைதான இன்னொரு வாலிபரான கண்ணதாசன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். 

இருவர் மீதும் 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 376 சட்டப்பிரிவு கத்திமுனையில் வழிப்பறி மற்றும் கற்பழிப்பு குற்றத்துக்காகவும் 397 என்பதும் வழிப்பறிக்காக போடப்படும் சட்டப்பிரிவுவாகும். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து துணை நடிகையிடம் இருந்து பறித்துச் சென்ற நகை, பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீடு புகுந்து துணை நடிகை கத்தி முனையில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க: கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News