)
தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ. 4.60ல் இருந்து ரூ. 4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ. 6.15ல் இருந்து ரூ. 6.45ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ. 8.15ல் இருந்து ரூ. 8.55ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ. 9.20ல் இருந்து ரூ. 9.65ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ரூ. 11.80 வசூலிக்கப்பட்ட உள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ