ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 18, 2022, 01:14 PM IST
  • எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு
  • தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்க
ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு title=

எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கபட்டு விட்டதாகவும், அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில்  நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை எனவும், தனி நீதிபதியின் தீர்ப்பு, கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடும் வகையில்  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

கட்சி ஒற்றை தலைமையை நோக்கி செல்லும் நிலையில், இரட்டை  தலைமை வேண்டும் என்ற ஒரு தனிநபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், உட்கட்சி செயல்பாடு குறித்து  நீதிமன்ற ஆய்வு செய்ய முடியாது எனவும் மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், கேட்கப்படாத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக ஜூன் 23 ஆம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு எதிரான இந்த தீர்ப்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளதக்கதல்ல எனவும், அந்த வழக்கு செல்லாததாகிவிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும் எனவும், பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாகவும், ஒற்றை தலைமை வேண்டும் என திடீரென முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார். வழக்கு எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால், அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அதிமுக விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை : சபாநாயகர் அப்பாவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News