Crime News: குடும்ப பிரச்சனையால் மருமகளை வெட்டி கொன்ற மாமனார்!

குடும்பப் பிரச்சனைக்காக மாமனாரே தனது மருமகளை வெட்டிக் கொன்ற சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 11:45 AM IST
  • ஆசிரியையை வெட்டிக் கொலை செய்த மாமனார்
  • குடும்பத் தகராறில் மருமகள் வெட்டிக் கொலை
  • மாமனாரின் வெறிச்செயல்
Crime News: குடும்ப பிரச்சனையால் மருமகளை வெட்டி கொன்ற  மாமனார்! title=

குடும்ப பிரச்சனைக்காக மாமனாரே மருமகளை வெட்டி கொன்ற சம்பவம்  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்றம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் பகுதியை சார்ந்த மணி மகன் சிவா (40) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு கந்திலி குமிடிக்கான்ப்பட்டி பகுதியை சார்ந்த முருகேசன் மகள் முருகம்மாளை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுனிஷா(11) ரோகித் (8) இரு குழந்தைகள் உள்ளன.

முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் முருகாம்மாளுக்கு கள்ளக்காதல் இருப்பதாகவும் கணவன் மற்றும் மனைவிக்கு கருத்து வேறுபாடு (Family Dispute) உள்ளது எனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முருகம்மாள் கடந்த மூன்று வருட காலமாக அவருடைய அப்பா வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.

ALSO READ | இனி மாஸ்க் அணியாமல் இருந்தால் அபராதம்

முருகம்மாள், தனது மாமனார் மணியை வீட்டை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார். தனக்குத்தான் இந்த வீடு சொந்தம் என்று சொன்னதை அடுத்து மாமனார் மற்றும் மருமகள் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இந்த நிலையில் முருகம்மாள் சமையலறையில் இருக்கும்போது, மாமனார் மணி தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகம்மாளின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார் 

இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். முருகம்மாளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 மணி தானாகாவே நாட்றம்பள்ளி காவல்நிலையத்திற்கு சென்று மருமகளை நான் வெட்டி விட்டதாக கூறி சரணடைந்துவிட்டார். மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

READ ALSO | கொரொனாவால் இறந்தவர்களின் சடலங்களை 16 மாதங்களாக மார்சுவரியில் வைத்திருந்த மருத்துவமனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News