முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 05:29 AM IST
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
  • நடிகை சாந்தினி மணிகண்டன் பெயருக்கு குந்தகம் விளைவிக்கவே இவ்வாறான புகார்களை அளித்துள்ளார்-மணிகண்டன் தரப்பு.
  • அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகள் கலைக்கப்படும் வாய்ப்புள்ளது - போலீசார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் title=

சென்னை: பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சமீபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். மணிகண்டன் தனக்கு வாக்கு அளித்து ஏமாற்றினார், கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நடிகை சாந்தினி (Actress Chandini). அவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்கள். 

திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியது, கொலை மிரட்டல் அளித்தது, கருக்கலைப்பு செய்ய வைத்தது என்பது போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அவருக்கு முஞ்சாமீன் அளிக்கக்கூடாது என நடிகை சாந்தினி தரப்பு கூறியது. 

ALSO READ: ADMK EX Minister மணிகண்டன் தலைமறைவு - தனிப்படை அமைத்து போலீசார் தீவிரம்!

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (Madras Highcourt), ஜூன் 9 ஆம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனால் மணிகண்டனுக்கு ஒரு சிறிய நிவாரணம் கிடைத்தது. 

இன்று மீண்டும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் (Former Minister Manikandan) ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அமச்சர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், மணிகண்டன் சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் இருப்பவர் என்றும், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சுமார் 12 ஆண்டு காலம் அரசு மருத்துவராக இருந்துள்ளார் என்றும் கூறினர். நடிகை சாந்தினி அவரது பெயருக்கு குந்தகம் விளைவிக்கவே இவ்வாறான புகார்களை அளித்துள்ளார் என்றும், எந்த வித விசாரணைக்கும் ஒத்துழைக்க மணிகண்டன் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மணிகண்டன் நடிகை சாந்தினியிடன் தான் திருமணமாகாதவர் என கூறி ஏமாற்றவில்லை என்றும், எந்த வித மிரட்டலையும் அளிக்கவில்லை என்றும் மணிகண்டன் தரப்பு கூறியுள்ளது. 

இந்த வழக்கு விசாரணை அரசுத் தரப்பில் ஆரம்ப நிலையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சாந்தினியின் வாக்குமூலங்களும் மருத்துவர்களின் வாக்குமூலங்களும் பெறப்பட்டு வருகின்றன. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என காவல்துறை வலியுறுத்தியது. அவர் செல்வாக்கு மிக்க நபர் என்பதால், அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுவதால், சாட்சிகள் கலைக்கப்படும் வாய்ப்புள்ளது என்றும் உயர் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய கட்டளையிட்டார். மேலும், இந்த மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். 

ALSO READ: சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News