சுகேஷ் சந்திரா யார் என்ரே எனக்கு தெரியாது- தினகரன்

Last Updated : Apr 17, 2017, 11:45 AM IST
சுகேஷ் சந்திரா யார் என்ரே எனக்கு தெரியாது- தினகரன் title=

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன்:-

இரட்டை இலை சின்னம் தொடர்பாக சுகேஷ் சந்திராவுடன்  நான் பேசவில்லை. டெல்லியில் கைதான சுகேஷ் சந்திரா யார் என்ரே எனக்கு தெரியாது. சசிகலாவை சந்திப்பதற்காக நான் இன்று பெங்களூர் செல்ல உள்ளேன்.

டெல்லி காவல் துறை சார்பில் என்னிடம் யாரும் பேச வில்லை. டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்க தயார். இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக நான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை.  கடசியை அழிக்க யாரோ திட்டம் போடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

Trending News