முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியிருக்கும் அதிமுக முன்னள் அமைச்சர் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 11:05 AM IST
  • அதிமுக முன்னள் அமைச்சர் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
  • சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வெண்டும் - உயர்நீதிமன்றம்
  • அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அவர் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் - உயர்நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு  title=

பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியிருக்கும் அதிமுக முன்னள் அமைச்சர் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Former Minister Manikandan) அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அவர் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வெண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நடிகையை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து ஏமாற்றிய பாலியல் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜூலை 2 ஆம் தெதி 2 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டார். ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

ALSO READ: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

முன்னதாக, துணை நடிகை அளித்த புகாரில், அதிமுக (AIADMK) மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து ஏமாற்றியதாகவும், பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, தான் அவரை தொடர்புகொண்டபோது, தன்னை தரக்குறைவாகப் பேசியதாகவும், கூலிப்படையின் பேரில் மிரட்டியதாகவும் அவர் பல புகார்களை அளித்தார்.

இந்த புகாரை எடுத்துக்கொண்ட அடையாறு அனைத்து மகளிர் போலீசார் (TN Police) விசாரணை நடத்தினார்கள். 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதலில் அந்த துணை நடிகையை யாரென்றே தெரியாது என கூறிய மணிகண்டன் மெல்ல மெல்ல தன் கூற்றை மாற்றத் தொடங்கினார். அவரை விசாரணைக்கு காவல் துறை தேடிய நிலை மணிகண்டன் தலைமறைவானார். தீவிர தேடலில் ஈடுபட்ட காவல் துறை இறுதியாக மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்தனர். 

ALSO READ:ADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News