மிரட்டும் மிக்ஜாம்... எப்போது கரையை கடக்கும்.... எங்கு கனமழைக்கு வாய்ப்பு?

Michaung Cyclone: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து, மிக்ஜாம் புயலாக இன்று காலை வலுபெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 3, 2023, 09:50 AM IST
  • புயல் நாளை காலை வட தமிழகக் கடலோரப் பகுதிகளை அடையும்.
  • நாளை மறுதினம் காலை புயல் கரையை கடக்கும்.
  • இன்று, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.
மிரட்டும் மிக்ஜாம்... எப்போது கரையை கடக்கும்.... எங்கு கனமழைக்கு வாய்ப்பு? title=

Michaung Cyclone Updates: தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிக்ஜாம்' என தீவிர புயலாக தீவிரமடைந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம், புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஆரஞ்ச் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகம், தீவிர புயலாக தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும் இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. 

மேலும் படிக்க | மக்ஜாங் புயல்: நாகையில் திடீரென உள்வாங்கிய கடல்

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, டிசம்பர் 4ஆம் தேதி (நாளை) காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி கிட்டத்தட்ட இணையாகவும், தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5ஆம் தேதி முன் பகலில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்றும் நாளையும்...

அந்த வகையில், இன்று (நவ. 3) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | புயலை எதிர்கொள்ள தயார், 5 பேர் இதுவரை உயிரிழப்பு.... மக்களே கவனம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News