பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார்.
ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏவான தமிழரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சேலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில், அவரது முன்னிலையில் பா.ம.க. கட்சியின் மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் அ.தமிழரசு தலைமையில் பா.ம.க.-வைச் சேர்ந்த மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.ஜெயவேல், ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.பழனிவேல், நகர முன்னாள் செயலாளர் ஏ.சகாதேவன், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வெங்கடாசலம், விவசாயஅணி முன்னாள் செயலாளர் எம்.செல்வம், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ஜ.அசோக்குமார், ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட் ட பா.ம.க. நிர்வாகிகள்- உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
---தி.மு.க.வில் இணைந்த பா.ம.க. நிர்வாகிகள் விவரம்---
- பா.ம.க. கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் ஆ.சின்னதுரை,
- மாவட்டமுன்னாள் துணைத் தலைவர் சி.இராமக்கவுண்டர்,
- சமூக முன்னேற்ற சங்க முன்னாள் மாநில இணைச் செயலாளர் வெ.சிவராயன்,
- மாவட்ட முன்னாள் சட்டபாதுகாப்பு குழுதலைவர் வழக்கறிஞர் கோ.சங்கரநாராயணன்,
- மாவட்ட முன்னாள் தலைவர் எஸ்.எம்.வைத்தி,
- மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர்கள் எஸ்.பி.மாதையன், கோ.அருணகிரி,
- வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் வெ.இராஜாகவுண்டர்,
- ஒன்றிய அமைப்பு முன்னாள் செயலாளர் ப.காளியப்பன்,
- ஒன்றிய முன்னாள் தலைவர் வீரப்பன்,
- ஒன்றிய முன்னாள் செயலாளர்கள் கே.ஜி.காமராஜ்,
- சி.இராஜேந்திரன், மாவட்ட முன்னாள் மகளிர் அணி செயலாளர் செல்வமணி பூபதி,
- மாவட்ட இளைஞர் அணி முன்னாள் தலைவர் பெ.இராஜாக்கண்ணு,
- முன்னாள் கவுன்சிலர்கள் க.மகாதேவன், ஆ.மாணிக்கம், மங்கா கிருஷ்ணசாமி, அமுதா ஆசைத்தம்பி,
- ஒன்றிய முன்னாள் செயலாளர்கள் எஸ்.கே.தியாகு, எம்.ஜெகதீசன், எஸ்.ஐ.கிருஷ்ணசாமி, ஆ.இராகு,
- ஒன்றிய அமைப்பு முன்னாள் செயலாளர் செ.குமாரசாமி,
- ஒன்றிய வன்னியர் சங்க தலைவர்கள் நைனாகாடுமணி, க.மாரியப்பன்,
- ஒன்றிய முன்னாள் அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சேகர்,
- ஒன்றிய முன்னாள் தலைவர்கள் அ.கோவிந்தராஜ், து.மணிவாசு,
- மாவட்ட தொழிற்சங்க முன்னாள் தலைவர் கரு.இரத்தினசாமி,
- மாவட்ட தொழிற்சங்க முன்னாள் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,
- நகர வன்னியர் சங்க முன்னாள் தலைவர் பொ.சக்தி,
- நகர முன்னாள் செயலாளர்கள் கோ.சசிகுமார், என்.நூருல்ஹாசன், என்.பாலகிருஷ்ணன், எல்.ஆறுமுகம்,
- நகர இளைஞர் அணி முன்னாள் செயலாளர் ஜெ.செந்தில்குமார்,
- நகர முன்னாள் செயலாளர் ஆ.சுரேஷ்குமார்,
- நகர முன்னாள் செயலாளர் மா.மாரியப்பன், குட்டி,
- ஒன்றிய வன்னிய சங்க முன்னாள் துணைத் தலைவர் பொன்னுவேல்,
- ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் செங்கோட்டையன்,
- ஒன்றிய வன்னியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் பொன்னுவேல்,
- ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் செங்கோட்டையன், ஒன்றிய வன்னியர் சங்க
- முன்னாள் தலைவர் குட்டி (எ) பெரியசாமி,
- ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் தலைவர் க.குமரேசன்,
- ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர், தளபதி,
- ஒன்றிய முன்னாள் துணை செயலாளர் துரை,
- நகர முன்னாள் தலைவர் எஸ்.கார்த்திக்,
- நகர முன்னாள் செயலாளர் எஸ்.மகேந்திரன்,
- நகர முன்னாள் துணைத் தலைவர்கள் கே.வினோத், கோ.கோவிந்தராஜ்,
- ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர்கள் அ.மாதேஷ், பெ.இராமர்,
- ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் துணைச் செயலாளர் க.சுரேஷ்,
- சமூக முன்னேற்ற சங்க மாவட்டப் பொறுப்பாளர் செ.மாதேஸ்வரன்,
- ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் நா.இராஜாங்கம்,
- ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் தலைவர் வெ.விஜயகுமார்,
- பாட்டாளி தொழிற் சங்கம் பி.செல்லப்பன்,
- பால் கூட்டுறவு சங்க முன்னாள்தலைவர் சி.பூபதி,
- சமூக முன்னேற்ற சங்க ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் த.பாரதி,
- ஒன்றிய சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் ஜோசப் ஆசிரியர்,
- ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் தலைவர் இரா.சதீஷ்குமார்,
- சமூக முன்னேற்ற சங்க ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் கே.இராமதுரை, ந.கவுசல்யன்,
- ஒன்றிய வன்னியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் க.சக்திவேல்,
- ஒன்றிய மாணவர் அணி முன்னாள் தலைவர் ச.கார்த்தி,
- ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சி.ஜெயபிரகாஷ், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் - உறுப்பினர்கள்.
இந்நிகழ்வின் போது சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.இராஜேந்திரன், எம்.எல்.ஏ., சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.இராஜா, தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.