நெல்லை முத்துராமலிங்கனார் உருவப்படம் உடைப்பு... 50-க்கும் மேலான போலீசார் குவிப்பு!

திருநெல்வேலி அருகே பசும்பொன் முத்துராமலிங்கனார், புலித்தேவன் ஆகிய தலைவர்களின் உருவப்படங்கள் உடைக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.     

Written by - Sudharsan G | Last Updated : Nov 8, 2022, 07:12 PM IST
  • இச்சம்பவம் நேற்றிரவு நேரத்தில் நடத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
  • படங்கள் உடைந்திருப்பதை மக்கள் பார்த்து, காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
  • தொடர்ந்து, அந்த ஊரின் அரசு பேருந்து போக்குவரத்து சேவை தடைப்பட்டிருப்பதாகவும் தகவல்.
நெல்லை முத்துராமலிங்கனார் உருவப்படம் உடைப்பு... 50-க்கும் மேலான போலீசார் குவிப்பு! title=

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில், பொதுமக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு, அதில் முத்துராமலிங்கத் தேவர், உருவப்படம் மற்றும் புலித்தேவன் உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

அந்த பீடத்தில் முத்துராமலிங்க தேவரின் ஒரு அடி உயரம் உள்ள களிமண்ணலான சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் அந்த சிலை உடைக்கப்பட்டதுடன் படங்களின் கண்ணாடிகளும் நேற்றிரவு (நவ. 7) உடைக்கப்பட்டுள்ளது.

இதை காலையில அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் அளிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு பகுதி காவல் துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் படிக்க | Viral Video: சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

தலைவர்கள் உருவ படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலரும் அங்கு திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கடந்து சென்றனர். 

பின்னர் அங்கிருந்த படங்கள் மற்றும் சிலைகள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய படங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பேருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 

பொதுவாக, இதுபோன்ற பிரச்சனைக்களுக்கு சில காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு காவல் துறை அமர்த்தும் நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பதற்றத்தை தவிர்க்க சுமார் நூற்றுக்கும் மேலான போலீசார் திருப்பணிக் கரிசல் குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பகுதி என்பதால், அங்கு சிசிடிவி கேமரா வசதி குறைவு என கூறப்படுகிறது. மேலும், அரசு பேருந்தை தவிர்த்து வேறு பொதுப்போக்குவரத்து மிகக்குறைவு எனவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - திருமாவளவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News