மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை

இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கணவர் மதுபோதையில் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 4, 2022, 02:21 PM IST
  • காதல் திருமணம் செய்து கொண்ட மகள்கள்
  • வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரம்
  • மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கொடூரம்
மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை title=

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிங்காரவேல் - முத்துலட்சுமி  தம்பதியினர். இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில், மற்ற இரண்டு பெண் குழந்தைகளும் காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சில வருடங்களாக மனைவி முத்துலட்சுமி மீது கோபத்தில் இருந்து வந்த கணவர் சிங்காரவேலு, தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

Crime,Murder,Husband,Wife,Arrest

‘மகள்களை கண்டிப்புடன் வளர்த்திருந்தால் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டார்கள்’என்று தினம் தினம் சொல்லி மனைவிக்கு தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் சிங்காரவேலுவின் வீட்டில் நிம்மதி என்ற ஒன்று இல்லாமலே போனது. இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவும் மது போதையில் வந்த சிங்காரவேலு மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில், வாக்குவாதம் ஏற்பட ‘எனது மகள்கள் ஓடிப்போக நீதான் காரணம் என கூறி’மனைவி முத்துலட்சுமியை  தலையில் கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்,சிங்காரவேலு. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்துறையினர் அங்கு மறைந்திருந்த சிங்காரவேலுவை கைது செய்தனர்.

மேலும் படிக்க | பிரபாகரன், வீரப்பனை போல் மாற திட்டம் - யூடியூப் பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்!

முத்துலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகை அருகே மகள்களின் காதல் திருமணத்திற்கு காரணமென மனைவியை கட்டையால் அடித்து கணவரே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பிறந்தநாளன்று மதுவிருந்து கொடுத்த கூலிக்கு நண்பனை தீர்த்துக்கட்டிய கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News