நான் கோமாவில் இல்லை: calm-ஆ போஸ்ட் போட்ட நித்தியானந்தா, பதட்டத்தில் பக்தர்கள்

Nithyananda Latest News: கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2022, 04:40 PM IST
  • நித்யானந்தா உடல் நலம் குறித்து இன்னும் பரபரப்பு நீடிக்கிறது.
  • சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் நிலை: நித்யானந்தா
  • கோமா நிலையில் இல்லை: நித்யானந்தா புதிய பதிவு.
நான் கோமாவில் இல்லை: calm-ஆ போஸ்ட் போட்ட நித்தியானந்தா, பதட்டத்தில் பக்தர்கள் title=

குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், தான் இறக்கவில்லை என்றும், சமாதி நிலையில் இருப்பதாகவும், 27 டாக்டர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் தன்னால் உணவு சாப்பிட முடியவில்லை என்றும் தனக்கு தூக்கம் வரவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | நான் இன்னும் சாகவில்லை… ஆனால் சமாதியில் இருக்கிறேன்’ வதந்திகளுக்கு நித்யானந்தா பதில்!

இந்த நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் நிலை. அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைத்துக்கொள்கிறது' என்று கூறியுள்ளார்.

தனது வீடியோ பதிவுகளாலும் வித்தியாசமான அறிவுறைகள் மற்றும் அறிவிப்புகளாலும் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும் நித்தியானந்தா தற்போதும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவர் சமாதி நிலையில் இருக்கிறாரா? கோமா நிலைக்கு சென்று விட்டாரா? இந்தியா திரும்புவாரா? இந்த பதிவுகள் அவருடையதுதானா? என பல கேள்விகள் பலரது மனங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற நித்யானந்தா - பிரசாதம் வாங்க முண்டியடித்த பக்தர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News