BJP-யின் பலத்தை எந்த கட்சியாலும் தாங்கமுடியாது -தமிழிசை!!

மக்கள் நலனில் விருப்பம் இல்லாமல் ஸ்டாலின் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jun 23, 2018, 11:18 AM IST
BJP-யின் பலத்தை எந்த கட்சியாலும் தாங்கமுடியாது -தமிழிசை!! title=

மக்கள் நலனில் விருப்பம் இல்லாமல் ஸ்டாலின் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!!

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது...! 

பா.ஜ.க-வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது என அவர் கூறினார். மேலும், காவிரி விவகாரம் குறித்து பேசுகையில், காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை என சொல்லும் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர், அவருக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டவில்லை என்று கூறினார். தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 

திமுக ஆட்சியில் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ.க. ஆட்சிதான் கொண்டு வந்துள்ளது. நாமக்கல்லில் மக்கள் நலனுக்காக தான் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் திமுக.வினர் கறுப்புக் கொடி காட்டினர். திமுக உண்மையாக அரசியல் செய்தால் கர்நாடகாவை நோக்கி தான் நடைபயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என கூறினார்.

 

Trending News