virtual flower showவாக மக்களைக் கவரும் 124வது ஊட்டி மலர் கண்காட்சி

கொரோனா பரவலால் virtual flower showவாக பரிணமித்து மக்களைக் கவரும் 124வது ஊட்டி மலர் கண்காட்சி 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 06:38 PM IST
  • virtual flower showவாக மக்களைக் கவரும் ஊட்டி மலர் கண்காட்சி
  • 124 ஆண்டுகளாக உதகையில் மலர் கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது
  • ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த கோடைவிழா உலக பிரசித்தி பெற்றது
  • 2000வது ஆண்டில் தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டத்தால் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டாலும் மக்கள் நேரிடையாக வந்து மலர்ப் பூங்காவை கண்டு ரசித்தனர்
virtual flower showவாக மக்களைக் கவரும் 124வது ஊட்டி மலர் கண்காட்சி title=

கொரோனா கிருமிப் பரவலானது உலகத்தையே புரட்டிப் போட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது. கொரோனாவின் தாக்கத்தால், கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான உதகை மலர்க் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் உதகை மலர்க் கண்காட்சி மிகவும் பிரபலமானது. மலரைச் சுற்றி வண்டுகள் மொய்ப்பதுபோல, சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் உதகை மலர்க் கண்காட்சியை கண்டு களிக்க ஊட்டியை வட்டமிடுவார்கள்.

Read Also | Cricketer ரவி சாஸ்திரியின் நிறைவேறாத காதல்

இந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் மலர்க் கண்காட்சி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு, அதற்கானபணிகள் பல மாதங்கள் முன்னதகவே தொடங்கிவிட்டன.  ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டிருப்பதால் உதகையின் 124-வது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டில் தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, வேறு வழியில்லாம உதகை மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. ஆனா அப்போது கூட மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் வரத்து இருந்தது.  அதிகாரப்பூர்வமாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை என்றாலும், பல மாதங்கள் முன்னதாக நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை மக்கள் கண்டு ரசிக்கும் வாய்ப்பு இருந்தது.

Read Also | கணித மேதை 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும்

ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக உதகை தாவரவியல் பூங்கா வரலாற்றில் மக்கள் நடமாட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பதால் பூத்துக் குலுங்கும் மலர்களையும், தோட்டக்கலைத் துறையின் மலர் அலங்காரங்களையும் யாரும் காணமுடியவில்லை.

ஆனால்  தொழில்நுட்ப வசதிகளால் மக்கள் வீட்டிலிருந்தே மலர்க் கண்காட்சியை கண்டு ரசிப்பதற்காக மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளால், பூங்கா முழுவதும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை மெய்நிகர் காட்சிகளாக அதாவது virtual flower showவாக உருவாக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த ஆண்டு உதகை தாவரவியல் பூங்காவின் மலர்க் கண்காட்சியை அனைவரும் வீடுகளில் இருந்தே கண்டு களிக்கலாம்.

Trending News