OPS vs EPS : கடைசி அஸ்திரம்., பிரம்மாஸ்திரம் : கோடநாடு வழக்கை கையில் எடுக்கும் ஓபிஎஸ்

OPS vs EPS : ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் உச்சம் பெற்றிருக்கும் நிலையில் கோடநாடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்கிறார் ஓபிஎஸ் மகன். அதன் உள்ளர்த்தம் என்ன!

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 5, 2022, 03:02 PM IST
  • பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் ஓபிஎஸ்
  • கோடநாடு வழக்கிற்கு இப்போது தூசு தட்டுவது ஏன்?
  • கோடநாடு வழக்கில் சிக்கப் போவது யார்!
OPS vs EPS : கடைசி அஸ்திரம்., பிரம்மாஸ்திரம் : கோடநாடு வழக்கை கையில் எடுக்கும் ஓபிஎஸ் title=

அதிமுக உட்கட்சி பூசல் பூதாகரமாகி வெடித்துள்ளது. நாளுக்கு நாள் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. மாற்றி மாற்றி கடிதம் எழுதுகின்றனர். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி தரப்பும் கூட்ட கூடாது என்று ஓபிஎஸ் தரப்பும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கட்சியின் முக்கிய பொறுப்பு யாருக்கு என்பதில் தொடங்கிய போட்டி இது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா பொது செயலலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். பின்னாளில் சசிகலா சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டபோது எடப்பாடி பழனிசாமியை கைகாட்டிவிட்டு சென்றார்.

மேலும் படிக்க | லீனாவை அரெஸ்ட் பண்ணுங்க... காளிக்கு எதிராக களமிறங்கிய ஹெச்.ராஜா

பின்னாட்களில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்துகொண்டு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் தகராறு வரக்கூடாது என்பதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி பகிர்ந்து கொண்டனர். ஆட்சி ஒருவருக்கு கட்சி ஒருவருக்கு என்ற நிலை வந்தது. ஆட்சியை எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்டார். கட்சியை ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக் கொண்டார்.

ஆட்சிக் காலம் முடிவடைந்த பின் சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார் எடப்பாடி பழனிசாமி. பொது செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி ஒற்றைத் தலைமையாக தான் அமர வேண்டும் என்று விரும்புகிறார். அன்று ஆட்சி அதிகாரத்தை இழந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று கட்சி அதிகாரத்தையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் பொதுக்குழுவை நடக்க விடாமல் தடுத்து வருகிறார். அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.

மேலும் படிக்க | EPS vs OPS - ஜெயலலிதா நாற்காலியில் எடப்பாடி... 11ஆம் தேதி பட்டாபிஷேகம்?

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் இன்று காலை எழுதியுள்ள பேஸ்புக் போஸ்ட் கவனத்தை ஈர்த்துள்ளது. கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அதில் எழுதியிருக்கிறார். கோடநாட்டை சுற்றி நடந்த கொலை கொள்ளை தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.

Jaya Pradeep

இப்படியிருக்க, ஜெயபிரதீப் கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க சொல்ல காரணம் என்ன என்று இணையதளம் பேசத் தொடங்கியுள்ளது. எடப்பாடி அணியினர் யாராவது கோடநாடு வழக்கில் சிக்குவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லது உண்மையில் குற்றவாளிகளை கண்டறிய பிராயத்தப் படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News