முதல்வர் முக ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை! மொட்டை அடித்து போராட்டம் செய்த மக்கள்!

அண்மையில் தாம்பரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சரின் பேச்சால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2023, 03:05 PM IST
  • பரந்தூர் விமான நிலைய திட்டம்.
  • கிராம மக்கள் மொட்டை அடித்து போராட்டம்.
  • பெண்கள் ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் போராட்டம்.
முதல்வர் முக ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை! மொட்டை அடித்து போராட்டம் செய்த மக்கள்! title=

சென்னையின் புதிய இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் 13கிராமங்களை உள்ளடக்கிய 4750ஏக்கர் பரப்பளவில் அமையப்படவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தன.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகி விடும் என ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இத்திட்டத்தினால் முழுமையாக பாதிப்படைய கூடிய ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் பணிகளை முடித்துவிட்டு கிராம மக்கள் மாலை நேரங்களில் அடையாள போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | கோடையில் நோ பவர்கட்: சம்மரில் கூலான செய்தி சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிய நடை பயண பேரணி நடத்தினர். அதேபோன்று தலைமைச் செயலகத்தை நோக்கிய நடை பயண பேரணி அறிவிப்பு போராட்டகாரர்கள் அறிவித்திருந்த நிலையில் மூன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தையானது நடத்தப்பட்டு பின்னர் இந்த தலைமை செயலகம் நோக்கிய இப்பேரணி போராட்டம் கைவிடப்பட்டது. இதுபோன்று இரண்டு முறை அமைச்சர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையானது நடைபெற்று இருக்கிறது.  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என  பிரதமர் மோடி அவர்களிடம் கேட்டிருந்தார். 

ஆய்வுகள், மண் பரிசோதனை போன்ற சோதனைகளுக்கு பிறகே இவ்விடத்தில் விமான நிலையம் வருகிறதா இல்லையா என்பதே உறுதியாகும் என அமைச்சர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் தெரிவித்து விட்டு வெளிப்படையாய் தற்போது முதலமைச்சர் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திட கேட்டிருப்பது ஏகானபுரம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிரக்கிறது.  இந்த நிலையில் இது குறித்து கிராம மக்கள் உடனான ஆலோசனை கூட்டமானது கடந்த இரண்டு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று 264வது நாள் போராட்டனாக இன்று ஏப்ரல் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய போக்கை கண்டித்தும் இத்திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே மொட்டை அடித்து நெற்றியில் திருநாமம் இட்டு கைகளில் திருவொடுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டமானது நடத்தப்படும் என பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பினர் நூதன முறையிலான போராட்டத்தினை அறிவித்திருந்தனர்.

அதன் படி இன்று ஏகனாபுரத்திலுள்ள ஆண்கள் மொட்டை அடித்துக்கொண்டு திருநாமம் இட்டு திருவோடு ஏந்திக்கொண்டும், ஒரு சில பெண்களும் மொட்டை அடித்து கொண்டும் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே வந்து ஒன்று கூடி, அங்கு பிச்சை எடுத்தும், கிராம பெண்கள் ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏகனாபுரம் கிராம மக்களின் இந்த நூதன போராட்டத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் தமிழக முதல்வர் தங்களது பகுதியினை வேளாண் மண்டலமாக அறிவித்து இந்த பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் இருந்து ஏகனாபுரத்திற்க்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | "பில் தானே கேட்டீங்க சீரியல் நம்பருமா கேட்டீங்க" வானதி சீனிவாசனின் பதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News