பாராளுமன்ற வருகை பதிவேட்டில் அன்புமணிக்கு பின்னடைவு!

மாநிலங்களவை எம்.பி.,க்களில், பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் வருகை பதிவேடும் பெரும் பின்னடைவு கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Dec 25, 2019, 04:25 PM IST
பாராளுமன்ற வருகை பதிவேட்டில் அன்புமணிக்கு பின்னடைவு! title=

மாநிலங்களவை எம்.பி.,க்களில், பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் வருகை பதிவேடும் பெரும் பின்னடைவு கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘அன்புமணி எனும் நான்’ என்ற முழக்கத்துடன் தமிழக சட்டசபை தேர்தலின் போது தனியாக பட்ஜெட், தனது சாதனைகள் ஆகியவற்றை வெளியிட்டு ஓட்டு கேட்டவர் பாமக அன்புமணி. இத்தகு நடவடிக்கையின் மூலம் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து தன்னை வித்தியாசமானவராக காட்டிக்கொண்டார். இதனால் படித்தவர்கள் மத்தியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது, எனினும் நடந்து முடிந்த மக்களவை தேர்தில் அதிமுக-வுடனான கூட்டணி அவரை தனது கோட்டையான தரும்பூரியிலேயே தோல்வி காண வைத்தது.

தற்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக.,விற்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்பட்டதை அடுத்து, இதன் மூலம் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார் அன்புமணி. 

இந்நிலையில் தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் உள்ள எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்த விபரம் அந்தந்த அவை இணையதளத்தில் வெளியிடப்பட்துள்ளது. இதில் தமிழக எம்.பி.,க்களில் மிக மோசமாக செயல்பட்ட எம்.பி.,யாக அன்புமணியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் 15% மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார் எனவும், இந்த ஆண்டு வெறும் 2 விவாதங்களின் போது மட்டுமே அவையில் இருந்துள்ளார் எனவும். அப்போதும் எந்த கேள்வியையும் கேட்வில்லை. தனிநபர் மசோதாவையும் கொண்டு வரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று மக்களவையல் குறைந்த செயல்பாட்டை கொண்ட எம்.பி.,யாக திமுக.,வின் ஜெகத்ரட்சகன் பெயரிடப்பட்டுள்ளார். இவர் 46 சதவீதம் அவை செயல்பாட்டில் பங்கேற்றுள்ளார் எனவும், லோக்சபாவில் தமிழக எம்.பி.,க்கள் 39 பேர் இருந்தும் 3 பேர் மட்டுமே 100 சதவீதம் அவை செயல்பாட்டில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 9 எம்.பி.,-க்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக அவைக்கு சென்றுள்ளனர். இவர்களில் 26 பேர் முதல் முறையாக எம்.பி.,யாக தேர்வானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக எம்.பி.,க்களில் அதிகபட்சமாக 42 விவாதங்களில் பங்கேற்ற எம்.பி.,யாக அதிமுக.,வின் ரவீந்திரநாத் குமார் இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் 79 சதவீதம் அவை செயல்பாட்டில் பங்கேற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Trending News