மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் ஓ.பி.எஸ் -சந்திப்பு

Last Updated : Jan 2, 2017, 02:54 PM IST
மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் ஓ.பி.எஸ் -சந்திப்பு  title=

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். 

சந்திப்புக்கு முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை திமுக போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடுகிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக போராடுவோம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காளையை காட்சி பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சிதான் அதை செய்தது.

தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்து வருகிறது. செய்த தவறுக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மோடி அரசு விவசாயிகளுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது எனவும் கூறினார்.

சந்திப்பு:

இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்ற து. சந்திப்பின்போது, குளச்சல் துறைமுகம், தமிழக சாலைப் பணிகள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசி வருவதாக தகவல் கிடைத்தது. 

ஓ..பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற பின், பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடக்கும் முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News