தொட்டதற்கெல்லாம் லஞ்சம்.. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குவிந்த பொதுமக்கள்

News in Chengalpattu: லஞ்சம், லஞ்சம் , லஞ்சம் என அனைத்துக்கும் லஞ்சம். பொதுமக்கள் வேதனை, ஒன்றுதிரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 28, 2022, 06:04 PM IST
  • முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவதற்கு 1000 ரூபாய் லஞ்சம்.
  • திருமண உதவித்தொகை பெற 3000 ரூபாய் வரை லஞ்சம்.
  • மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரூ. 2000 வரை லஞ்சம்
தொட்டதற்கெல்லாம் லஞ்சம்.. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குவிந்த பொதுமக்கள் title=

News in Tamil Nadu: செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தின் கீழ் நெல்வாய் ஊராட்சி (Nelvoy Gram Panchayat) செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு நெல்வாய், பேக்கரணை மற்றும் சாத்தமங்கலம் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. 

இந்த ஊராட்சிக்கு கிராம நிர்வாக அலுவலராக சசிகுமார் பணிபுரிந்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்குவதற்கு, ஒரு சான்றிதழ் ரூ. 200 வீதம் லஞ்சம் கேட்டு வாங்குவதாகவும், முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்குவதற்கு 1000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், அதுமட்டுமில்லாமல் சமுதாய ரீதியாக கிராம மக்களை இழிவு செய்வதாகவும், அப்பகுதி மக்கள் சசிகுமார் மீது குற்றச்சாட்டி உள்ளனர்.

மேலும் படிக்க: நாமக்கல்: மோசடி செய்து வாகனத்தின் பெயர் மாற்றம், குடும்பத்துடன் போராட்டம்

Chengalpattu District Collector

இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் புகார் மனுவை அளித்தனர். பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுவில், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் 2000 வரை லஞ்சம் கேட்பதாகவும், திருமண உதவித்தொகை பெற விண்ணப்பித்தால் 3000 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக விவசாயிகள் பயிர் கடன் பெற அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும்போது ஏக்கருக்கு ரூ. 5000 வரை லஞ்சம் கேட்பதாக புகார் அளித்துள்ளனர். இதே போல பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு பத்தாயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

News in Chengalpattu

இதுக்குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜிடம், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலரிடம் பேசும் வீடியோ ஆதாரத்தையும் அப்பகுதி மக்கள் அளித்துள்ளனர். வீடியோவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.

மேலும் படிக்க: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு, இன்று முதல் சிறப்பு முகாம்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News