தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழப்பு

விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழப்பு.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 30, 2024, 02:17 PM IST
  • வயலுக்கு சென்ற சிறுவன்.
  • டிராக்டரில் ஏறி விளையாடியதால் வந்த விபரீதம்
  • தந்தையின் கண் முன்னே உயிரிழந்தார்.
தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழப்பு title=

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கூக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன், கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இளைய மகன் பரத்குமாருக்கு 8 வயதாகிறது. இவர் கூக்கலபள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.  இன்று விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் அவர் வயலுக்கு சென்றுள்ளார். அவரது தந்தை கூக்கலபள்ளி கொள்ளை மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக டிராக்டர் மூலம் உழுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை அழைத்துச் சென்றுள்ளார்.  

அவர் அவருடைய டிராக்டரை கொண்டு வந்து நிலத்தில் உழுவதற்காக நிறுத்தி வைத்திருந்தபோது பரத்குமார்  டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் மீது ஏறி நின்று உள்ளார்.

அப்போது ஆதி கேசவன் டிராக்டரை நிலத்தில் உழுவதற்காக எடுத்தபோது நிலை தடுமாறி பரத்குமார்  கீழே விழுந்து உள்ளார் அப்போது டிராக்டர் ரோலரில் சிக்கி தந்தையின் கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்திருக்கிறார் 

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பரத்குமார் மீட்க முயற்சித்த உள்ளனர். ஆனால் பரத்குமார்  சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

மேலும் படிக்க | 101 பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள்... கூடவே மாதம் ரூ.5000 - ரோட்டரி கிளப் அசத்தல்!

சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தந்தையின் கண் முன்னே மகன் டிராக்டரின் ரோலரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News