இன்று கார்த்திகை பூர்ணிமா விழாவையொட்டி பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாராய் என்னும் புனித தலத்தில் கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் புனித நீராடுவதற்காக கங்கை நதியில் இறங்கி நீராடினர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் வதந்தி பரவியது. இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் முண்டியடித்து வெளியேற நினைத்து உள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
கடந்த அக்டோபர் 5 ம் தேதி பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் திட்டத்தின் கீழும், பீகார் பள்ளி திட்ட கழகத்தின் கண்காணிப்பிலும் செயல்படும் அமைப்பால் தயார் செய்யப்பட்டு, பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று திறந்து வைக்கப்படவிருந்த பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை நேற்று உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த அணை ரூ 389 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அணையை கட்ட 1977-ம் ஆண்டு ஆணையம் அனுமதி அளித்தது. பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 40 வருடங்களாக கழித்து தடுப்பணை கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்படுவதாக இருந்த அணை பாகல்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் தடுப்பணை உடைந்து சுற்றி இருந்த ஊருக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. இதனால் அணை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
பிகாரில் ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராஷ்ட்ரிய சஹாரா நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா, பீகார் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பேங்கில் இருந்து 1 லட்சம் பணம் எடுத்துகொண்டு வரும் வழியில், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பீகாரில் ஆதித்ய சச்தேவாவை சுட்டுக்கொன்ற வழக்கில் ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் உட்பட மற்ற மூன்று பேர் குற்றவாளி என கயா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பீகாருக்கு 5 கோடியும் அசாம் மாநிலத்திற்கு 2 கோடி ரூபாயை மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பீகார் மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) வருகை புரிந்தார்.
முன்னதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உணவு முகாம்கள் நடத்தப்படுவதாக உறுதிபடுத்தியுள்ளார்.
பீகார் பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) தலைவர் முகம்மது ஷாபுபூதின் மீது சிபிஐ குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.
குற்றவியல் சதி மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் ஷாபுபூதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னும் சில குற்றவாளிகளும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டனர்.
மே 13, 2016 அன்று பத்திரிகையாளரான ராஜதேவ் ரஞ்சன், சியாணியில் வேலை முடிந்த வீட்டுக்கு திரும்பிவருகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தாய், மகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
பீகார், அசாம், மேற்கு வங்காளம் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
சரத் யாதவிற்கு பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை என்றால் காட்சியில் இருந்து வெளியேறலாம் எனவும், நீங்கள் விரும்பும் கூட்டணிக்கு செல்லலாம் என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) முத்த தலைவர் கேதர் ராய் என்பவர் பீகார் மாநிலத்தில் சுக்னா சாலையில் இன்று (ஆகஸ்ட் 9) காலை நடந்து சென்றபோது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது நிதீஷ் குமாரின் தற்போதைய அரசாங்கத்தை மிக விரைவில் கலைக்கப்படும், மேலும் அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதில் தோல்வி அடைவார் என்றும் கூறினார். நிதீஷ் எங்களுடன் பணியாற்ற விரும்பவில்லை என்றால், அவர் ஏன் இத்தனை காலம் காத்திருந்தார்?என கேள்வி எழுப்பினர்.
மேலும் பனாமா பேப்பர்ஸ் கசிவு வழக்கில் பெயரிடப்பட்ட நபர்கள் அனைவருக்கும் எதிராக விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் வைத்தாரா? என கேட்டுள்ளார்.
இன்று பீகார் மாநில முதல்வராக தவியேற்ற நிதிஷ் குமார், பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று பீகார் மாநில முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர். இவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பீகார் மாநில முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், வாழ்த்துக்கள் கூறிய பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நிச்சயமாக பீகார் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என அவர் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.