வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 125 விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.,50000 வீதம் நிதி உதவி நடிகர் தனுஷ் வழங்கியிருக்கிறார்.
தேனி அருகிலுள்ள சங்கராபுரம் என்ற ஊரில் இந்த நிகழ்வு நேற்று நடந்தது. அங்கு 125 விவசாயக் குடும்பங்களையும் சொந்த செலவில் அங்கு அழைத்து வந்து தங்க வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்வரை மொத்த செலவும் தனுஷ் தானாம்.
இப்பணிகளை இயக்குனர் சுப்ரமணிய சிவா முன்னின்று ஒருங்கிணைத்து வருகிறார். விவசாயிகளுக்கு பணம் வழங்கி உதவிய போது தனுஷுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா இருந்தார்.
நடிகர் தனுஷ் பேசியதாவது:
தனுஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.
தற்போது தனுஷ் மலேசியாவில் இருக்கிறார். அங்கு மலேசிய ரசிகர்கள் தனுஷிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தனுஷ், தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Was so overwhelmed by the love showered by fans in Malaysia .. was so touched when they sang happy birthday for me. Whatta birthday eve
— Dhanush (@dhanushkraja) July 27, 2017
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவு அடைந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த்துள்ளார்.
இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பெல்ஜியம், பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.
லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில் சில நாள்களுக்கு முன்னர், 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி ஒன்று நடக்க ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி பெரும்பான்மையாக தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாகும். ஆனால் இது குறித்து தெரியாத பல வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர்.
2016-ம் ஆண்டிற்கான ஆண் பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் நாளிதழ் வெளிட்டுள்ளது. அதில் முதல் 50 இடங்களை பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழக நடிகர்களில் தனுஷ் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை ரோகித் கன்டெல்வால் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் டீஸர் இன்று(புதன் கிழமை) மாலை 4 மணியளவில் வெளியாகி உள்ளது. தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
டீஸர்:-
ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவு சரியாகாக தான் இருக்கும் என்று நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினி, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன் என்றும் தெரிவித்தார். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு "பச்சை தமிழன்" என்று அறிவித்துக் கொண்டார்.
நடிகர் தனுஷின் ‘விஐபி-2’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்டார் நடிகர் தனுஷ்.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ரஜினிகாந்த், பா.இரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு மே 28-ம் தேதி தொடங்குகிறது.
‘கபாலி படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவாவில் தங்கியிருந்து படத்தின் கதை தயாரிப்பு பணியில் பா.இரஞ்சித் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூர் தம்பதி தொடுத்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.
தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்புச் செலவு வழங்க நடிகர் தனுஷுக்கு உத்தரவிடக்கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.
தனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ திரைப்பட டிரைலர் ஒரே நாளில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த தனுஷ், அடுத்தக்கட்டமாக இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, பவர் பாண்டி என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்க, பிரிம் பிச்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரித்து இருக்கும் படம் தான் "யாக்கை" இப்படத்தில் கிருஷ்ணா, பிரகாஷ் ராஜ், ராதாரவி மற்றும் சுவாதி நடித்திருகிறார்கள்.
ஏற்கனவே யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடிய 'சொல்லி தொலையேன் மா' பாடல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அந்த பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ பதிவை யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். அவரின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
வீடியோ:-
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் "எனை நோக்கி பாயும் தோட்டா". இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் 2017 தொடக்கத்திலேயே படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘ எனை நோக்கி பாயும் தோட்டா ’
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நவம்பர் 27-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதையடுத்து, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்க 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்துக்கு கதை, வசனத்தை தனுஷ் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கவிருக்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்க இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவிருக்கிறது.
இந்நிலையில் இன்று தனுஷ் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் அறிவிப்பை தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் முதன்முறையாக இரட்டை வேடத்தில் கலக்கும் கொடி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கயுள்ளார்.
தற்போது 'கொடி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்ப்பு பெற்றது.
டிரைலர்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.