காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது 2 இந்திய பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீரென தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியானில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் காவலில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோன்று மாநிலத்தில் வங்கிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன, ஆனால் உள்ளூர் கல்வீச்சாளர்கள் இந்நகர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்கள் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டதற்கு, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதைக்குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்தூல் பசீத்தை அழைத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் மனிதாபிமானற்ற செயலுக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததாகவும்,
குப்வாரா அருகே பன்ஞ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் தீவிரவாதிகள் காஷ்மீர் பகுதிக்குள் நுழைகின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் குப்வாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியின் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நிலைத்திருக்க செய்ய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்கிறார்கள். அவ்வபோது அவர்களை இந்திய ராணுவம் வீரர்கள் வேட்டையாடுகிறது.
இன்று எல்லையில் கெரான் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள், இந்திய ராணுவம் பலமுறை அவர்களை எச்சரித்தது, பின்னர் ஏற்பட்ட சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து எல்லையில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் மேலும் நடைபெறும் என பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், ராணுவம் குவிக்கப்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி எழுப்பியுள்ள சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் இன்று நக்ரோடா பகுதியில் சீவுதல் நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது. காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் நேற்று மரணம் அடைந்தனர்.
காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒரு வீரரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்துள்ளது. காஷ்மீரின் மேக்சல் செக்டார், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அசாமின் டிக்போய் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், உபா பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் போலீஸார் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:- தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர். அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த சண்டையில் சத்ரிபோரா சோபியான் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.