ஜம்மு-காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில், பல மறைவிடங்கள் இருப்பதைக் கண்டறிந்த இந்திய ராணுவம் அங்கிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மீட்டுள்ளது.
இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது என்றாலும், பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பை சீர் குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்து கொள்ளப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளது.
கடந்த வாரம் இந்தியா-சீனா எல்லை விவகாரங்களில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பிற்கான (WMCC) 18 வது கூட்டம் நடைபெற்றது. அதில் கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் ராஜூரியில் எல்லை கட்டுபாட்டு பகுதியில், பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறி துப்பாக்கி சூட்டில், ஈடுபட்டது. அதற்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
லடாக்கில், கால்வான் முதல் பாங்கோங் த்சோ வரை சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நேரத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதிகள் பெருமளவில் குவிந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன
இரண்டாம் உலக போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் அடையாளமாக இந்த ஆண்டு வெற்றி விழா அணிவகுப்பில் இந்திய ராணுவத்துடன் சேர்த்து மேலும் 11 நாடுகளின் படைகளும் பங்கேற்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.