நேற்று முன் தினம் இரவு டெல்லி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நேற்று (ஜூலை 25) காலை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்பிறகு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவை அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அப்போது அவர்:
மருத்துவ படிப்புக்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராந்திய மொழிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் நீட் தேர்வு எழுத அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்னைகள் நீங்கப்படும்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அமைச்சர்கள் இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியது,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது உறுதியாக கூறமுடியாது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர பிதரமரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய திமுகவினர் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக சார்பில் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டி, வருகிற 12- ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக்குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நீட் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
மருத்துவப் படிப்பில் சேர என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது.
11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று கூடியது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில், மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேசியப் பொது நுழைவுத் தேர்வு கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற நீட் தேர்வின்போது, மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற செய்து சோதனை செய்தார்கள். இது பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சோதனைகளை தென்மாநிலங்களில் மட்டுமே மத்திய கல்வி வாரியம் செயல்படுத்தி வருவது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் சி.பி.எஸ்.இ. நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவபடிப்புக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதற்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நீட் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு இதை ஏற்க மறுத்து விட்டது.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் ‘நீட்’ நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி கூறியதாவது:-
ஜி.எஸ்.டி., மசோதா மீதான தடைகற்கள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான
பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
கடந்த மாதம் 9-ம் தேதி பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைந்தது. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. இந்த தொடர் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த தொடரில் பாராளுமன்ற அவை மற்றும் டெல்லி மேல் சபையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளன என தெரிகிறது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் குறித்து 2 அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கிறது என தெரிகிறது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த கல்வியாண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 24-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
இன்று டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
விரிவாக பார்போம்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.