இன்று முதல் இலங்கையில் புர்கா அணிய தடை!!

இலங்கையில் இன்று முதல் புர்கா உள்ளிட்ட முக திரைகளை அணிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தடை விதித்துள்ளார்.

Last Updated : Apr 29, 2019, 09:57 AM IST
இன்று முதல் இலங்கையில் புர்கா அணிய தடை!! title=

இலங்கையில் இன்று முதல் புர்கா உள்ளிட்ட முக திரைகளை அணிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தடை விதித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர்.

இதையடுத்து இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் வாகனங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. மேலும் இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Trending News