7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, இந்த காரணியில் உயர்வு சாத்தியம்

7th Pay Commission: மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 16, 2022, 10:40 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல் உள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, இந்த காரணியில் உயர்வு சாத்தியம் title=

7வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி உள்ளது. முதலில் அகவிலைப்படி, பிறகு வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பயணப்படி, பதவி உயர்வு என பல வித அதிகரிப்புகளை பெற்ற பிறகு, இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்களின் சம்பளம் இதன் மூலம் மீண்டும் ஒரு ஏற்றத்தைக் காணும். பல ஊடக அறிக்கைகளின் படி, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது தெளிவாகியுள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் உயரும்.

அரசு பரிசீலித்து வருகிறது

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஜூன் மாத இறுதிக்குள், சம்பளத்தில் உயர்த்தப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் 39% டிஏ, பம்பர் ஊதிய ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிக்கும். 

தற்போது, ​​பணியாளர்கள் 2.57 சதவீத ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதியம் பெறுகின்றனர். இப்போது அதை 3.68 சதவீதமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. இப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். அதாவது இதுவரை 18,000 ரூபாய் என்ற சம்பளம் 26,000 ரூபாயாக உயரும்.

ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல்

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. எனினும் 7வது சிபிசி இன் கீழ் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசு ஆதரவாக இல்லை. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். 

ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18000ல் இருந்து ரூ.21000 ஆக உயரும். அமைச்சரவை செயலாளருடனான ஊழியர் சங்க கூட்டத்திலும் இதற்கான உறுதி அளிக்கப்பட்டது. அரசாங்கம் இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிக கவனம் செலுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு ஏற்றம் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் டிஏ அரியர் குறித்த முக்கிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News