ஐபிஎல் 2023 முடிந்ததும் ஜியோ சினிமாவின் மிகப்பெரிய திட்டம்! உஷார் மக்களே!

ஜியோ சினிமா இயங்குதளம் அதன் பயனர்களுக்கு இலவசமாக பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்த நிலையில் தற்போது சில மாற்றங்களை செய்யவிருக்கிறது. 

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2023, 06:01 PM IST
  • ஜியோ தனது பயனர்களுக்கு 3 கிரிக்கெட் ஆட்-ஆன் பேக்குகளை வழங்குகிறது.
  • ரூ.222, ரூ.444 மற்றும் ரூ.667 விலைகளில் ஆட்-ஆன் பேக்குகள் கிடைக்கிறது.
  • ஜியோ ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா & கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
ஐபிஎல் 2023 முடிந்ததும் ஜியோ சினிமாவின் மிகப்பெரிய திட்டம்! உஷார் மக்களே! title=

ஜியோ சினிமா அதன் பயனர்களுக்கு இலவசமாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பி பிரபலமானது, நடப்பாண்டின் ஐபிஎல் போட்டியை இந்த இயங்குதளம் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.  ஜியோ சினிமா இயங்குதளம் அதன் பயனர்களுக்கு இலவசமாக பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்த நிலையில் தற்போது சில மாற்றங்களை செய்யவிருக்கிறது.  நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற மற்ற ஓடிடி தளங்களுக்கு போட்டியாக ஜியோ நிறுவனம் போட்டியிட முடிவெடுத்து இருப்பதால், இந்த தளமும் விரைவில் மற்ற தளங்களை போலவே அதன் பயனர்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.  மேலும் 100க்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஜியோ சினிமா அதன் பயனர்களுக்கு வழங்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | JanDhan Account: அரசின் பெரிய பரிசு, ரூ. 10,000 கிடைக்கும், இப்பவே இதை பண்ணுங்க

நடப்பாண்டின் கடைசி ஐபிஎல் போட்டி மே 28ம் தேதியன்று நடைபெறுகிறது, இந்த கடைசி போட்டி முடிவடைந்த பிறகு ஜியோ சினிமா அதன் பயனர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கும்.  இதுகுறித்து நிறுவனத்தின் அதிகாரி ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில், ஜியோ சினிமா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை வழங்கவிருக்கிறது.  கிரிக்கெட் ஒளிபரப்புகளுக்கு பிறகு நிறுவனம் அதன் சலுகைகளை விரிவுபடுத்த முயற்சி செய்வதோடு இந்திய சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மாறுகிறது என்று தெரிவித்துள்ளார்.  மேலும் ஜியோ சினிமா அதன் பயனர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார்.  இந்த நடவடிக்கையின் மூலம் நிறுவனத்திற்கு வருவாய் அதிகரிக்கும் மற்றும் சந்தையில் சக்திவாய்ந்த தளமாகவும் இது உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2023 ஸ்ட்ரீமிங் தொடங்கியவுடன், ஜியோ ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் மற்றும் சிறப்பு வவுச்சர்களுடன் கிரிக்கெட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.  ஜியோ வழங்கும் புதிய கிரிக்கெட் ஆட்-ஆன் பேக்குகள் மூலம் பயனர்கள் டேட்டா தீர்ந்து போனாலும் கவலைப்படாமல் போட்டியை பார்த்து ரசிக்கலாம்.  ஜியோ தனது பயனர்கள் ஐபிஎல் போட்டியை பார்த்து ரசிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.222, ரூ.444 மற்றும் ரூ.667 ஆகிய விலையில் 3 கிரிக்கெட் ஆட்-ஆன் பேக்குகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | வந்தது புதிய விதி! இனி ஹெல்மெட் போட்டாலும் அபராதம் விழும்... எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News