Old Pension Scheme அட்டகாசமான அப்டேட்: இவர்களுக்கு OPS கிடைக்கும்.. இதை செய்தால் போதும்!!

Old Pension Scheme: யாராவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பினால், அவர்கள் அதன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2023, 05:51 PM IST
  • ஜனவரி 2004 முதல், நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) முறை தொடங்கப்பட்டது.
  • என்பிஎஸ் -இன் கீழ், 10 சதவிகிதம் ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
  • பழைய ஓய்வூதியத்தில் ஜிபிஎஃப் வசதி உள்ளது, ஆனால் புதிய ஓய்வூதியத்தில் அது இல்லை.
Old Pension Scheme அட்டகாசமான அப்டேட்: இவர்களுக்கு OPS கிடைக்கும்.. இதை செய்தால் போதும்!! title=

பழைய ஓய்வூதியத் திட்டம் புதுப்பிப்பு: நீங்கள் ஒரு அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒரு அரசு ஊழியர் இருந்தாலோ இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 22 டிசம்பர் 2003 வரை மத்திய பணியாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு விளம்பரத்தின் மூலம் வேலை பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். இதில், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இருவரும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். அதன் விண்ணப்பத்திற்கு ஆகஸ்ட் 31, 2023 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சஞ்சீவ் நாராயண் அனுப்பியுள்ள கடிதத்தில் உ.பி.,யின் பணியாளர் துறை இதற்கான பணிகளை துவக்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 

ஊழியரின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம்

ஜனவரி 2004 முதல், நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) முறை தொடங்கப்பட்டது. என்பிஎஸ் -இன் கீழ், 10 சதவிகிதம் ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. பழைய ஓய்வூதியத்தில் ஜிபிஎஃப் வசதி உள்ளது, ஆனால் புதிய ஓய்வூதியத்தில் அது இல்லை. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சில காலமாக வலுத்து வருகிறது. 

அதை ஏற்ற சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்  திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியும் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய பணியாளர் அமைச்சகத்தின் கடிதம் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு

உ.பி.யின் பணியாளர் துறை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்புகிறது

பணியாளர் அமைச்சகத்தின் கடிதத்தின்படி, மத்திய ஆயுதப் படைகளின் ஊழியர்கள் அதன் வரம்புக்குள் வர மாட்டார்கள். உ.பி.யின் பணியாளர் துறை இந்த கடிதத்தின் நகலை அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புகிறது. அதன் வரம்புக்கு உட்பட்டவர்கள் 31 ஆகஸ்ட் 2023 -க்குள் தங்கள் அவகாசத்தைத் தேர்ந்தெடுக்க விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், 2003 டிசம்பர் 22 ஆம் தேதி வரை அரசு ஆட்சேர்ப்புக்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தின் கீழ், ஜனவரி 2004க்கு பிறகு பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், 2003-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட விளம்பர அடிப்படையில் வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய பலன் வழங்க பரிசீலிக்கப்பட்டது. இதற்கான விருப்பம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. யாராவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பினால், அவர்கள் அதன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஊழியர் இந்த விருப்பத்தை உரிய தேதிக்குள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அவர் தேசிய ஓய்வூதியத் திட்டம் அதாவது என்பிஎஸ் -இன் பலனைத்தான் பெறுவார். பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு அக்டோபர் 31, 2023 -க்குள், ஆணை வழங்கப்பட்டு, அவர்களது என்பிஎஸ் கணக்கு மூடப்படும்.

என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்

என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்

ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.

லும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News