ஓய்வூதியதாரர்களுக்கான மத்திய அரசு திட்டங்கள்: ஓய்வு பெற்றவர்கள் கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய தகவல்

Pensioners Latest News: ஓய்வூதியம் வழங்கும் முறையை எளிமையாகவும் திறமையாகவும் ஆக்குவதற்கும், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் அரசு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2024, 05:04 PM IST
  • தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழு.
  • அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஓய்வூதியம் செலுத்துதல்.
  • ஓய்வூதிய செயல்முறையை எளிதாக்குதல்.
ஓய்வூதியதாரர்களுக்கான மத்திய அரசு திட்டங்கள்: ஓய்வு பெற்றவர்கள் கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய தகவல்

Pensioners Latest News: ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களின் கஷ்டங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் முறையை எளிமையாகவும் திறமையாகவும் ஆக்குவதற்கும், ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் அரசு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Add Zee News as a Preferred Source

ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களின் குடும்ப நலனிற்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்.

- தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழு (SCOVA):

ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக SCOVA உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறுவோருக்கான கொள்கை உருவாக்கம் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஓய்வூதியம் பெறுவோரிடமிருந்து கருத்துகளைப் பெறுவதே இந்த குழுவின் நோக்கமாகும். ஓய்வூதியர்களுக்கு புதிய நலத்திட்டங்களை பரிந்துரைப்பது, கொள்கைகளை திறம்பட செயல்படுத்த உதவுவது, அரசு திட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மேம்பாடுகளுக்கான பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்த குழுவின் சில செயல்பாடுகள் ஆகும். SCOVA மூலம், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிக்கவும் தீர்வுகளைப் பெறவும் உதவி கிடைக்கிறது.

- தகவல் மற்றும் வசதி மையம் (IFC):

புது தில்லியில் உள்ள லோக் நாயக் பவனில் IFC அமைந்துள்ளது. ஓய்வூதியம் தொடர்பான திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தகவல்களை ஓய்வூதியதாரர்களுக்கு இது வழங்குகிறது. ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் புகார்களைத் தெரிவிக்கவும், அவர்களின் நிலையை அறியவும் ஒற்றைச் சாளர சேவையை இது வழங்குகிறது. விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதும் அவற்றின் தீர்வுகளை விரைவாக செயல்படுத்துவதும் இதன் செயல்பாடுகளில் அடங்கும். இந்த மையம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க ஒரு பிரத்யேக தளத்தை வழங்குகிறது.

- கருணை நிதி (Compassionate Fund)

பணியாளருக்கு அகால மரணம் ஏற்பட்டால், அதன் பிறகு நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதே இதன் நோக்கமாகும். கருணைத் தொகை, ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்பு நிதி போன்ற பலன்களை அந்தக் குடும்பம் பெறவில்லை என்றால், அவர்களுக்கு இந்த நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படுகிறது. ஒரு ஊழியர் இறந்த பிறகு நிதி உதவி இல்லாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த நிதி பாதுகாப்பு அளிக்கிறது.

- குடும்ப ஓய்வூதியத் திட்டம் (Family Pension)

பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த மத்திய அரசு ஊழியர் (Central Government Employees) குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், விவாகரத்து செய்யப்பட்ட மகள்கள் மற்றும் ஊழியரை சார்ந்திருக்கும் பிற நபர்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்திட்டத்தின் மூலம், குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு உத்தரவாதமான நிதி உதவி கிடைக்கும்.

- அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஓய்வூதியம் செலுத்துதல்:

ஓய்வூதியத்தை சரியான நேரத்தில், உடனடியாக வழங்குவதை உறுதி செய்ய வங்கி கிளைகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவோர் அருகிலுள்ள வங்கிக் கிளையிலிருந்து சேவைகளைப் பெறுகின்றனர். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வங்கிகள் டிஜிட்டல் மற்றும் ஆஃப்லைன் சேவைகளை வழங்குகின்றன. இந்த அமைப்பு ஓய்வூதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதோடு ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகளைக் குறைக்கிறது.

- ஓய்வூதிய செயல்முறையை எளிதாக்குதல்

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை செயலாக்குவதில் தாமதம் குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் கோரிக்கைக்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆவண சரிபார்ப்பை செயல்படுத்தும் பவிஷ்யா (BHAVISHYA) மென்பொருளின் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஓய்வூதிய செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் திறமையானதாகவும் ஆக்கியுள்ளது.

மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோ

- உதவித்தொகை கொடுப்பனவுகள்:

சேவையின் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்திற்கு ஒரு கூட்டுத் தொகை வழங்கப்படும். சிறப்பு சூழ்நிலைகளில் ஊனம் அல்லது இறப்பின் போது கருணைத் தொகை வழங்கப்படுகின்றது. இது அவசரகால சூழ்நிலைகளில் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.

- ஓய்வூதிய விதிகளில் திருத்தம்

முக்கிய மேம்பாடுகள்:

- அதிகபட்ச கருணைத் தொகை: ரூ.25 லட்சம்
- குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதம் ரூ.9000
- கம்யூடேஷன் வரம்பு: ஓய்வூதியத்தில் 40% வரை
- சம்பளத்தில் அகவிலைப்படி (DA) சேர்த்தல்
- குடும்ப ஓய்வூதியம்: கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30%

இந்த திருத்தங்கள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அதிக நிதி நன்மைகளையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன.

- குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி நீட்டிப்பு:

புதிய பயனாளிகள்:

- சார்ந்திருக்கும் பெற்றோர்.
- விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற மகள்கள்.
- திருமணமாகாத மகள்கள்.

இதன் மூலம் ஓய்வூதிய பலன்களை பெறும் உரிமையை அதிகமானோர் பெற்றுள்ளனர்.

- உடல் ரீதியாக/மன ரீதியாக ஊனமுற்ற குழந்தைகளுக்கான சான்றிதழ் செயல்முறையை எளிமைப்படுத்தல்:

புதிய விதிகள்:

- நிரந்தரமாக ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒரு முறை வாழ்க்கைச் சான்றிதழ்.
- தற்காலிகமாக ஊனமுற்ற குழந்தைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சான்றிதழ்.
- பெற்றோருக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் வேலை இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

இது பெற்றோர் மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான செயல்முறைகளை எளிதாக்கியுள்ளது.

- அகவிலை நிவாரணம் (Dearness Relief)

பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலை நிவாரணம் வழங்கப்படுகிறது.

- ஓய்வூதியத் திட்டங்களின் வரம்பு

இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஜனவரி 1, 2004க்கு முன் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்திய அரசின் இந்த நலன்புரி திட்டங்கள் அனைத்தும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இந்த சீர்திருத்தங்கள் ஓய்வூதிய முறையை மிகவும் திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளன.

மேலும் படிக்க | EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News