காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்த யூகங்கள், வதந்திகள் வேண்டாம்!

காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வரவேண்டும் என ரந்தீப் சுர்ஜிவாலா கோரிக்கை!!

Last Updated : May 27, 2019, 05:00 PM IST
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்த யூகங்கள், வதந்திகள் வேண்டாம்! title=

காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வரவேண்டும் என ரந்தீப் சுர்ஜிவாலா கோரிக்கை!!

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகள் வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளார் ரந்தீப் சுர்ஜிவாலா விளக்கம் அளித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் பற்றி தவறான தகவல்கள் பரவி வருவது துரதிர்ஷ்டவசமானது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து மட்டுமே காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கங்கள், வதந்திகள் வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வர வேண்டும். காங்கிரஸில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்ய கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

 

Trending News