பூசணி விதைகளை தூக்கி எறியும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

பூசணி விதைகளின் பலன்கள்: பூசணிக்காயை சமைக்கும் போது, ​​அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சில வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இழக்க நேரிடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2023, 08:55 AM IST
  • சமைக்கும் போது, அதனை நறுக்கிய பின் பூசணி விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுவோம்.
  • பூசணி விதைகளில் உள்ள வியக்கத் தக்க நன்மைகள் அடங்கியுள்ளது.
  • பூசணி விதையில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி பதற்றத்தை நீக்கும்.
பூசணி விதைகளை தூக்கி எறியும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்! title=

பூசணி  வீடுகளில் அடிக்கடி பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சமைப்பது மிகவும் எளிதானது. மேலும் செரிமானத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க கூடும், ஒன்று நாம் பூசணி வாங்கும் போது விதைகளே இல்லாத பூசணிக்காயை வாங்குகிறோம். விதைகள் இருந்தால், சமைக்கும் போது, அதனை நறுக்கிய பின் அதன் விதைகளை குப்பைத் தொட்டியில் வீசுவோம். ஆனால் அவற்றின் நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்தால், ஒருவேளை நீங்கள் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டீர்கள். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், பூசணி விதைகளில் உள்ள வியக்கத் தக்க நன்மைகள் அடங்கியுள்ளது என்பது குறித்து விளக்கி கூறினார்.

பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்

1. மன அழுத்தம் விலகும்

தற்காலத்தில் வேலை, குடும்பம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகமாகிவிட்டதால், பெரும்பாலானோர் அடிக்கடி டென்ஷன் மற்றும் மனச்சோர்வை சந்திக்க வேண்டியுள்ளது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பூசணி விதைகள் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் அவற்றில் மெக்னீசியம் உள்ளது. இது மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது தவிர, பூசணி விதையில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி  பதற்றத்தை நீக்கும்.

2. நிம்மதியான தூக்கம் 

இப்போதெல்லாம், பலருக்கு தூக்க பிரச்சனை உள்ளது. நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல் பலர் அவதிப்படுகின்றனர். கடுமையாக முயற்சிகள் செய்தாலும், அவர்களால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை, இரவு முழுவதும் தூக்கம் வரமாமல் படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கும் சூழ்நிலை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பூசணி விதைகள் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். இதைப் பயன்படுத்தினால் தூக்கமின்மை நீங்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவலைப்படாம மாம்பழம் சாப்பிடலாம்... ‘இதை’ மட்டும் கவனத்தில் கொள்ளவும்!

3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் இதனால் ஒருவர் தொற்றுநோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். வைட்டமின் ஈ பூசணி விதைகளில் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

4. நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்

நீரிழிவு நோயாளிகள் பூசணி விதைகளை நிச்சயம் உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அதில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது வகை 2 நீரிழிவு நோய்க்கு நிவாரணம் அளிக்கும். இந்த விதைகளில் வைட்டமின் சி உள்ளது. இது சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Diabetes Control: இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா மூலிகையை ‘இப்படி’ பயன்படுத்தவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News