Diabetes Control: இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா மூலிகையை ‘இப்படி’ பயன்படுத்தவும்!

Herbs to Control Diabetes: சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2023, 08:36 AM IST
  • சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா.
  • இன்றைய கால கட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது.
  • திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்து.
Diabetes Control: இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும்  திரிபலா மூலிகையை ‘இப்படி’ பயன்படுத்தவும்! title=

இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். ஏனெனில், இன்றைய கால கட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். இதனால் நீரிழிவு நோயாளிகளின் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்பதோடு, வேறு விதமான தீவிர நோய் பாதிப்பையும் தடுக்கலாம். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், நீரிழிவு நோயில் திரிபலாவை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்றும், இதை 3 விதங்களில் சாப்பிடலாம் என்றும் கூறுகிறார்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திரிபலா

திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்து. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை இது.  சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது சர்க்கரையை ஜீரணிக்க உதவுகிறது.

திரிபலா சாப்பிடுவதற்கான 3 வழிகள்

1. நெய்யுடன் சாப்பிடவும்

முதலில், நீங்கள் சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்துசாப்பிடுங்கள். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

2. மோர் கலந்து குடிக்கவும்

திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 கிளாஸ் மோர் மற்றும் 1 ஸ்பூன் திரிபலா கலந்து குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!

3. திரிபலா கஷாயம் குடிக்கவும்

திரிபலா கஷாயம் அனைவருக்கும் நன்மை பயக்கும், ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.அதை எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.

கஷாயம் தயாரிக்கும் முறை

இரவில் ஒரு இரும்பு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் திரிபலா சூரணத்தை கலக்கவும். கஷாயம் தயாரானதும், காலை வரை அப்படியே விடவும். பின்னர் அதில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

ஒரு வயதுக்கு மேலான குழந்தைகள் முதல் அனைவரும் திரிபலா சூரணத்தை உட்கொள்ளலாம். கர்ப்பிணிகள் முறையான மருத்துவ ஆலோசனையுடன்  மட்டுமே உட்கொள்ள வேண்டும். வயதானவர்கள் அவர்களின் வயதுக்கும் தேவைக்கும் தகுந்தாற்போல் கால் தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது தினமும் அரை தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் அச்சம் இல்லை.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் செய்யும் மாயங்கள்! தயாரிப்பது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News