Pistachios With Milk: சர்க்கரை நோயை அடக்கி ஆளும் பிஸ்தா பால்

Health Care Tips: பிஸ்தாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் வைட்டமின் பி6, புரதம் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நல்ல அளவில் உள்ளது. இது தவிர பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 03:17 PM IST
  • பிஸ்தாவை பாலில் என்னென்ன நன்மைகள்.
  • பிஸ்தாவில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
Pistachios With Milk: சர்க்கரை நோயை அடக்கி ஆளும் பிஸ்தா பால் title=

பிஸ்தா பாலின் ஆரோக்கிய நன்மைகள்: பிஸ்தாவில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் வைட்டமின் பி6, புரதம் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளது. இது தவிர பிஸ்தாவை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். பெரும்பாலானவர்கள் பிஸ்தாவை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பிஸ்தாவை பாலில் கொதிக்க வைத்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் பிஸ்தாவை பாலில் காய்ச்சி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பிஸ்தாவை பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

தசைகள் வலுவாகும்
பிஸ்தா மற்றும் பால் சேர்த்து குடிப்பதால் தசைகள் வலுவடையும். ஏனெனில் பால் மற்றும் பிஸ்தாவில் தசைகளை வலுப்படுத்த உதவும் புரதச்சத்து அதிகம் உள்ளது. அதனால் இதனை தினமும் உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | மலச்சிக்கலில் இருந்து நிரந்தர தீர்வு பெற வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும் 

எலும்புகள் வலுவடையும்
பிஸ்தாவை பாலில் கொதிக்க வைத்து குடித்தால் எலும்புகள் வலுவடையும். ஏனென்றால், பால் மற்றும் பிஸ்தாக்களில் கால்சியம் அதிகளவில் நிறைந்துள்ளது, இது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி பிஸ்தாவை பாலில் காய்ச்சி குடித்தால் மூட்டுவலி குறையும்.

கண்களுக்கு நன்மை
மொபைல் அல்லது லேப்டாப்பில் தொடர்ந்து வேலை செய்பவர்களின் கண்கள் மோசமான விளைவை ஏற்படுத்தும், இது போன்ற சூழ்நிலையில் பிஸ்தாவை பாலில் வேகவைத்து குடிக்கலாம். இதனை உட்கொள்வதால் உங்கள் கண்களுக்கு பலன் கிடைக்கும். ஆம், பிஸ்தாவை பாலில் காய்ச்சி சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
பிஸ்தா மற்றும் பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். பிஸ்தாவை பாலில் காய்ச்சி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News