சர்க்கரை நோய், இதய நோயாளிக்கு அருமருந்தாகும் இந்த பச்சை இலை

நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2022, 12:37 PM IST
  • இதய நோய்களைத் தடுக்கும்
  • அதிகளவு எனெர்ஜி கிடைக்கும்
  • பற்களை வலுவாக்கும்
சர்க்கரை நோய், இதய நோயாளிக்கு அருமருந்தாகும் இந்த பச்சை இலை title=

இந்தியாவில் நாள்தோறும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே நீரிழிவுடன் கூடிய சிறுநீரக நோய்களுடைய நோயாளிகளின் பெருக்கமும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக நீரிழிவு நோயாளிகள் முருங்கை இலைகளை சாப்பிட பல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது அமினோ அமிலங்களின் வளமான மூலமாகும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

முருங்கை இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு பயன் தரும்
நீரிழிவு நோயாளிகள் முருங்கை இலைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும், இதில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது, அத்துடன் இதில் வலுவான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அளவைக் குறைக்கிறது, இவை அனைத்தும் நீரிழிவு நோயை கட்டுபடுத்த உதவியாக இருக்கும். முருங்கை இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை செல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

முருங்கை இலைகளின் மற்ற நன்மைகள்

1. இதய நோய்களைத் தடுக்கும்
இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதில் முருங்கை இலைகள் உதவியாக இருக்கும். அவை இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன.

2. அதிகளவு எனெர்ஜி கிடைக்கும்
முருங்கை இலையைச் சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரித்து சோர்வு நீங்கும். இந்த இலைகளில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலின் பலவீனத்தை நீக்குகிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
முருங்கை இலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் காரணமாக, இது பல தொற்று நோய்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

4. பற்களை வலுவாக்கும்
உண்மையில் முருங்கைக்காயில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. முருங்கை இலைகளைப் பயன்படுத்துவதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். அதேபோல் முருங்கை இலை கஷாயத்தை காலையில் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும். மேலும் இதைப் பயன்படுத்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பற்களையும் வலுப்படுத்த உதவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News