மும்பை டாடா கேன்சர் மருத்துமனையில் தீ விபத்து

Last Updated : Feb 11, 2017, 11:58 AM IST
மும்பை டாடா கேன்சர் மருத்துமனையில் தீ விபத்து title=

மும்பையில் டாடா கேன்சர் மருத்துமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பரேல் பகுதியில் டாடா மெமோரியல் கேன்சர் மருத்துமனை இயங்கி வந்தது. இந்த மருத்துமனையின் அடித்தளத்தில் இன்று காலை 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் சுமார் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. இந்த விபத்து குறித்து போலீசாரும் ஒருபுறம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News