காவல்துறையினர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - மோடி!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என காவலர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!!

Last Updated : Dec 9, 2019, 10:28 AM IST
காவல்துறையினர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - மோடி! title=

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என காவலர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!!

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் திறமையான காவல்துறையின் பங்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புனேவில் நடந்த ஒரு நிகழ்வில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடையேயும் நம்பிக்கையை ஊக்குவிக்க காவல்துறை படத்தின் பிம்பத்தை மேம்படுத்த அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் வழியுறுத்தினார்.

பாஷனின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) டிசம்பர் 6-8  வரை நடைபெற்ற 54 வது போலீஸ் டைரக்டர் ஜெனரல் (DGP) / இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IG) மாநாட்டில் பிரதமர் பேசினார். அப்போது, அவர் கூறுகையில்; அனைத்து தரப்புகளிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று, போலீசார் தங்களின் மீதான செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். போலீசார் மக்களுடனான நட்புறவை மேம்படுத்த வேண்டும்.

அனைத்து மாநில போலீசார், குறிப்பாக காஷ்மீர் மற்றும் உ.பி., போலீசார், மத்திய துணை ராணுவப்படை ஆகியன நாட்டை பாதுகாப்பை வைத்திருக்க பாடுபட வேண்டும்.காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்ட போதும், அயோத்தி தீர்ப்பு வெளியான போதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் காத்தது போது, எப்போதும் பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார். தெலங்கானா மற்றும் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறைக்கு பிரதமர் மோடி இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.  

 

Trending News