கொரோனா மருந்து DRDO 2-DG: கொரோனா சிகிச்சையில் ஒரு பெரும் மைல் கல்லாக இருக்குமா

கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக, நேற்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு கொரோனா மருந்து ஒன்றின் பயன்பட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2021, 04:12 PM IST
  • கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் (Remdesivir) மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.
  • COVID-19 இரண்டாவது அலையின் போது, ஏராளமான நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
  • விலை நிர்ணயம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை
கொரோனா மருந்து DRDO 2-DG:  கொரோனா சிகிச்சையில் ஒரு பெரும் மைல் கல்லாக இருக்குமா title=

கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக, நேற்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு கொரோனா மருந்து ஒன்றின் பயன்பட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா சிகிச்சையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir)  மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் (Dr.Reddy's) ஆய்வகங்களுடன் இணைந்து டிஆர்டிஓ உருவாக்கிய கொரோனாவிற்கான புதிய மருந்தான  2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG) ) அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் ஒரு சாக்கெட்டில் வருகிறது, இது தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

இந்த மருந்தை கொரோனா (Corona Virus) நோயாளிகளுக்கு அளிக்கும் போது, பயன்பாடு மருத்துவ ஆக்ஸிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த மருந்து வேலை செய்யும் முறை

"2-டி.ஜி.மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் வைரஸ் பல்கி பெருகுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

கோவிட் சிகிச்சையில்  2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

COVID-19 இரண்டாவது அலையின் போது, ஏராளமான நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த மருந்து நோயாளியை விரைவில் குணப்படுத்தி, அவர் உடல் நிலை மோசமாகும் வாய்ப்பைய குறைப்பதோடு, அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுவதோடு, COVID-19 விரைவில் குணமாகும் நிலை ஏற்படுதால், படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது. 

இதற்கான விலை எவ்வளவு

விலை நிர்ணயம் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு சாக்கெட்டிற்கும் ரூ .500-600 செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகம் இணைந்து ஏற்கனவே மருத்துவமனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மருந்துகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலக் கூறுகள் உள்நாட்டில் கிடைக்கும் பொதுவான மருந்து பொருட்கள் என்பதால்,  இதன் உற்பத்தியும் எளிது.

ALSO READ | மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News