"என் ராணுவ வீரர்கள்..." பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு!

தேர்தல் பரப்புரையில் இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி எனது வீரர்கள் என அழைத்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : May 12, 2019, 04:30 PM IST
"என் ராணுவ வீரர்கள்..." பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு! title=

தேர்தல் பரப்புரையில் இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் மோடி எனது வீரர்கள் என அழைத்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்ற போது, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியானில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் ராணுவ வீரர்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருப்பார்களா” எனக் கேள்வி எழுப்பினார்.

ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு சென்ற வாரம் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று ஆறாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் குஷிநகரில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “தீவிரவாதிகள், எதிரே துப்பாகியுடனும் வெடிகுண்டுகளுடனும் நிற்கிறார்கள். அந்த நேரத்தில் எமது ராணுவ வீரர்கள், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப் போவார்களா. 

நான் வந்த பிறகு, காஷ்மீரில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதான் என் பாணி” என்று பரப்புரை மேற்கொண்டார்.

இம்முறை தேர்தலை ஆளும் பாஜக தரப்பு, தேசியவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை முன் வைத்து சந்தித்து வருகிறது. இன்று காலை நடந்து அதிரடி துப்பாக்கிச்சூடு பற்றி எந்த எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பாத நிலையில், பிரதமரின், “எனது வீரர்கள்” என்ற கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. 

முன்னதாக உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், “மோடியின் ராணுவம்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் எதிர்கட்சிகள் புகார் அளித்தன. 
அரசியல் ஆதாயத்துக்காக பாதுகாப்புப் படையை பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவுறுத்தியிருந்தது, இந்நிலையில் தற்போது மீண்டும் மோடி அவர்கள் என் வீரர்கள் என ராணுவ வீரர்களை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News