CSK அணிக்கு அடுத்த அடி, அணியை விட்டு வீரர் வெளியேற்றம்!

காயம் காரணமாக IPL 2018 தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரம் கேதர் ஜாதவ் விலகினார்!

Last Updated : Apr 9, 2018, 08:43 PM IST
CSK அணிக்கு அடுத்த அடி, அணியை விட்டு வீரர் வெளியேற்றம்! title=

காயம் காரணமாக IPL 2018 தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரம் கேதர் ஜாதவ் விலகினார்!

IPL தொடரின் 11-வது சீசனின் முதல் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

இப்போட்டியில் CSK அணியில் களமிறங்கிய கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஆட்டத்தின் 13-வது ஓவரில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். 

இதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் பின்னர் களமிறங்கிய வெயின் பிராவோ அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி நோக்கி சென்றது எனினும் பிராவோ விக்கெட்டை இழக்க கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் மீண்டும் இறங்கி அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

ஆட்டம் முடிந்த பின்னர் கேதர் ஜாதவின் காயம் குறித்து ஆராயப்பட்டது. அப்போது காயத்தின் வீரியம் ஹாம்ஸ்ட்ரிங்கின் 2-வது கிரேடு எனத் தெரியவந்துள்ளது. இதனால் IPL 2018 தொடரில் இருந்தே கேதர் ஜாதவ் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணிக்காக அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்களில் ஜாதவும் ஒருவர். IPL ஏலத்தினில் இவருக்கு ரூ.7.8 கோடியினை சென்னை அணி செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News