தமிழ்நாட்டில் உள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு மறக்காம சுற்றுலா போங்க!

தற்போது தமிழ்நாட்டில் பருவமழைக்காலம் துவங்கி உள்ளது. இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள சில இடங்களுக்கு சுற்றுலா சென்றால் நன்றாக இருக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Aug 4, 2024, 05:31 PM IST
  • வேலூர் கோட்டை பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது.
  • பல வரலாற்று சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன.
  • இந்து, முஸ்லீம் கோவில்கள் இங்கு உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு மறக்காம சுற்றுலா போங்க! title=

வேலூர் தமிழ்நாட்டின் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். ஏனெனில் இங்கு நீண்ட காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட பெரிய கோட்டை உள்ளது. வேலூரை ஆண்ட சன்ன பொம்மி மற்றும் திம்மா ரெட்டி ஆகியோரால் இந்த கோட்டை 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அவர்கள் தங்கள் வீரர்களைப் பாதுகாக்க இந்த கோட்டையை கட்டியுள்ளனர். வேலூரில் உள்ள இந்த கோட்டை தென்னிந்தியாவில் மிகப்பெரியது. இதன் பரப்பளவு 500 சதுர மீட்டர், உயரம் சுமார் 220 மீட்டர் ஆகும். இந்த கோட்டை நகரின் நடுவில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உள்ளது. கோட்டையை தாக்க முயற்சிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க இந்த பள்ளத்தில் பயங்கரமான முதலைகளையும் வைத்திருந்துள்ளனர். முதலைகள் இருப்பதால், எதிரிகள் கோட்டையைக் கைப்பற்றுவது மிகவும் கடினமாக இருந்தது.

மேலும் படிக்க | ஹைட்ரஜனால் இயங்கும் டாக்ஸியில் பறக்கத் தயாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பறக்கும் டாக்ஸி!

கோட்டையின் சுவாரஸ்யமான கதை

வேலூர் கோட்டை முதலில் விஜயநகர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பல மன்னர்கள் காலப்போக்கில் இதை ராணுவ தளமாக பயன்படுத்தினர். மராட்டிய மன்னன் சிவாஜி, கோட்டையைக் கைப்பற்றுவதற்காக விஜயநகர அரசுடன் நீண்ட காலமாகப் போரிட்டு இறுதியில் வெற்றி பெற்றார். அவர்களை தோற்கடித்து முகலாய பேரரசர்கள் கைப்பற்றும் வரை மராட்டியர்கள் 29 ஆண்டுகள் கோட்டையை ஆண்டனர். இந்த கோட்டை விஜயநகர ஆட்சியாளர்களின் முடிவையும் அவர்களின் மன்னரின் படுகொலையையும் கண்டது. 1760ல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்த பிறகு ஆங்கிலேயர்கள் முகலாய ஆட்சியாளர்களை தோற்கடித்து இந்த கோட்டையை கைப்பற்றினர். இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்த கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மத்திய அரசு இந்த கோட்டையை பராமரிக்கும் பொறுப்பை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது.

வேலூர் கோட்டையில் பார்க்க வேண்டியவை

வேலூர் கோட்டையின் உள்ளே ஜலகண்டீஸ்வரர் என்ற அழகிய கோவில் உள்ளது. கோவிலின் சுவர்களில் மிக அழகான சிற்பங்கள் உள்ளன, அவை நீண்ட காலத்திற்கு முன்பு திறமையான தொழிலாளர்களால் செதுக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட செயின்ட் ஜான்ஸ் தேவாலயம், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட உள்ளன. மேலும் கோட்டையின் வரலாற்றைக் கூறும் அருங்காட்சியகமும் உள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை கோட்டையைப் பார்வையிட சிறந்த நேரம், ஆனால் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்திலும் இது நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் கோட்டை மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

வேலூரில் உள்ள கல்வி நிறுவனங்கள்

வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் தவிர நிறைய கல்வி நிறுவனங்களும் உள்ளன. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ நாராயணி நர்சிங் பள்ளி, ஷீஃபெலின் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த், அருண் காலேஜ் ஆஃப் பாராமெடிக்கல் சயின்ஸ், தந்தை பெரியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, வூர்ஹீஸ் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, ஆக்ஸிலியம் கல்லூரி, டி.கே.எம். மகளிர் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, தந்தை பெரியார் ஈ.வி.ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க | விந்து தானம் என்றால் என்ன? யாரெல்லாம் செய்யலாம்? வழிமுறைகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News