Pension: அரசு அளித்த பரிசு, இவர்களுக்கு இனி அதிக பென்ஷன், இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Pension News Update: கடந்த வாரம் EPFO ​​அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2023, 02:17 PM IST
  • உச்ச நீதிமன்றம் நவம்பர் 4, 2022 அன்று தனது உத்தரவில், இபிஎஃப்ஓ ​​அனைத்து தகுதியான உறுப்பினர்களுக்கும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது.
  • இந்த நான்கு மாத காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைகிறது.
  • ஆகையால் இதற்கான கடைசி காலக்கெடு மார்ச் 3, 2023 என்று நினைக்கப்பட்டது.
Pension: அரசு அளித்த பரிசு, இவர்களுக்கு இனி அதிக பென்ஷன், இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் title=

ஓய்வூதிய செய்தி புதுப்பிப்பு: மாத சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.  அதிக ஓய்வூதியம் பெற உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதிக ஓய்வூதியம் பெற மே 3, 2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது. விண்ணப்ப தேதியை இபிஎஃப்ஓ ​​நீட்டித்துள்ளது. இதற்கு முன் மார்ச் 3 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்த நிலையில், தற்போது அதை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இபிஎஃப்ஓ தகவல் கொடுத்தது

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) உறுப்பினர்கள் தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து மே 3, 2023 க்குள் அதிக ஓய்வூதியத்திற்கு கூட்டாக விண்ணப்பிக்க முடியும். ஓய்வூதிய நிதி அமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 2023ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி உயர் ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய கடைசித் தேதி என்று முன்பு குறப்பட்டது. இபிஎஃப்ஓ-இன் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட URL, அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதி மே 3, 2023 என்று தெளிவாகக் காட்டுகிறது.

நீதிமன்றம் உத்தரவிட்டது

முன்னதாக உச்ச நீதிமன்றம் நவம்பர் 4, 2022 அன்று தனது உத்தரவில், இபிஎஃப்ஓ ​​அனைத்து தகுதியான உறுப்பினர்களுக்கும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த நான்கு மாத காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைகிறது. ஆகையால் இதற்கான கடைசி காலக்கெடு மார்ச் 3, 2023 என்று நினைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | 2000 ரூபாயை கள்ள நோட்டா என்று பார்ப்பது எப்படி? - ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

கடந்த 2014ல் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது

கடந்த வாரம் EPFO ​​அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. நவம்பர் 2022 இல், உச்ச நீதிமன்றம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 2014 ஐ உறுதி செய்தது. முன்னதாக, ஆகஸ்ட் 22, 2014 இன் இபிஎஸ் திருத்தம், ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியது. மேலும், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் தங்கள் உண்மையான சம்பளத்தில் 8.33 சதவீதத்தை EPS க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக இபிஎஃப்ஓ ​​தனது கள அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

URL தகவல் விரைவில் கிடைக்கும்

URL தகவல் விரைவில் வழங்கப்படும் வகையில் வசதி வழங்கப்படும் என்று இபிஎஃப்ஓ ​​கூறியிருந்தது. இதற்குப் பிறகு, மண்டல பிஎஃப் ஆணையர் முறையான அறிவிப்பு மற்றும் பேனரை அறிவிப்பு பலகையில் வைப்பார். இதனால் அது பகிரங்கமாகத் தெரிவிக்கப்படும். இதன் கீழ், ஒவ்வொரு விண்ணப்பமும் பதிவு செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, ரசீது எண் வழங்கப்படும். பிராந்திய வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் பொறுப்பாளர் ஒவ்வொரு கூட்டு விருப்ப வழக்கையும் மதிப்பாய்வு செய்வார். இதற்குப் பிறகு விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல்/அஞ்சல் மூலமாகவும் பின்னர் SMS மூலமாகவும் முடிவு குறித்து தெரிவிக்கப்படும்.

மேலும் படிக்க | Old Pension Scheme: விரைவில் அரசு தரப்பிலிருந்து சூப்பர் செய்தி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News