EPFO புதிய விதி, ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்

EPFO: 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் சம்பளத்தில் பங்களித்து, அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களும் இந்த நன்மையைப் பெறுவார்கள் என்று EPFO ​​கூறுகிறது. முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 31, 2022, 10:35 AM IST
  • EPFO ​​புதிய விதிகள்.
  • ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம்.
  • ஊழியர் வருங்கால வைப்பு நிதி.
EPFO புதிய விதி, ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும் title=

EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அதன்படி, இனி நீங்கள் உங்கள் கணக்கில் அதிக பணத்தை பெற முடியும். உண்மையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தகுதியான ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது, மேலும் அதை நடைமுறைப்படுத்த உள்ளூர் அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில், ஊழியர்களுக்கு பெரும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு, பணியாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இப்போது அதைப் பற்றி விரிவாக நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

யாருக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்?
டிசம்பர் 29 அன்று உச்ச நீதிமன்றத்தில் EPFO ​​ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதன்படி அதில், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் அதிக சம்பளத்தை கட்டாயமாகப் பங்களித்து, ஓய்வுக்கு முன் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்து, ஆனால் அவர்களின் கோரிக்கையை EPFO ​​திட்டவட்டமாக நிராகரித்த ஊழியர்களுக்கு, இப்போது அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க: Budget 2023: பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிதி அமைச்சர் அளிக்கவுள்ள நல்ல செய்தி

இது தவிர, சம்பள வரம்பான 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் சம்பளத்தில் பங்களிப்பை செலுத்தி, அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்த உறுப்பினர்களும் இந்த சலுகையைப் பெறுவார்கள் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) கூறுகிறது. EPFO சுற்றறிக்கையின்படி, இந்த உத்தரவுக்குப் பிறகு ஊழியர்கள் உயர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தகுதி பெற மாட்டார்கள்.

அதிக ஓய்வூதியத்திற்கான தகுதி
1. EPF திட்டத்தின் பாரா 26(6) இன் கீழ் விருப்பச் சான்று
2. பாரா 11(3) ஆதாரம் முதலாளியால் சான்றளிக்கப்பட்டது
3. வைப்புச் சான்று
4. ரூ.5,000 - ரூ.6,500 வரம்புக்கு மேல் சம்பளத்தில் ஓய்வூதிய நிதியில் வைப்புச் சான்று
5. APFC ஆதாரம்

இப்படி விண்ணப்பிக்கவும் (அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கவும்)
* இதற்காக, உள்ளூர் அலுவலகத்துக்குச் சென்று ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, தொடர்புடைய ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
* ஆணையாளர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
* சரிபார்ப்பில் ஏதேனும் தவறு காணப்பட்டால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.

மேலும் படிக்க: Income Tax Slab: இந்த வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும், உங்கள் வருமாத்திற்கு வரி எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News