கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் ஹோமியோபதி மருத்துவம்.. வெறும் 6 நாட்கள்..!!

கொரொனாவுக்கு எதிரான போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது ஹோமியோபதி மருத்துவம்.  இந்த மருந்தை மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமே சாப்பிட்டால் போதும், COVID-19 தொற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 26, 2020, 12:03 AM IST
  • இந்தியாவில் கொரொனாவுக்கு எதிரான போரில் ஹோமியோபதி மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது.
  • இந்த மருந்தை பயன்படுத்துபவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே இந்த மருந்தின் சிறப்பம்சம்.
கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் ஹோமியோபதி மருத்துவம்.. வெறும் 6 நாட்கள்..!!   title=

புதுடெல்லி: தற்போது, கொரோனா வைரஸை (Coronavirus) எதிர்த்துப் போராட தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் உலகமே மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவங்களில் புகழ்பெற்ற இந்தியாவும் பின்தங்கவில்லை. இந்தியாவில் கொரொனாவுக்கு எதிரான  போரில் ஹோமியோபதி மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. ஹோமியோபதி மருத்துவ உதவியுடன் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தப்படுகிறது.  
 
மும்பையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோமியோபதி (Homeopathy) மருத்துவத்தை பயிற்சி செய்து வருபவர் டாக்டர் ஜவஹர் ஷா. அவர் தற்போது உலகம் முழுவதும் உள்ள சுமார் 100 ஹோமியோபதி மருத்துவர்களுடன் இணைந்து கொரொனாவுக்காக சிறப்பு மருந்தை (CK1 மற்றும்CK2)  உருவாக்கியுள்ளார். இந்த மருந்தை பயன் படுத்துபவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால்,  எந்த நோயும் அவர்களை எளிதில் அண்டாது. 

ஹோமியோபதியின் (Homeopathy) உதவியுடன், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதோடு, புதிய பாதிப்புகளும் குறைக்கப்படுகிறது.  
 
மேலும் படிக்க: தொடர்ந்து 6-வது நாளாக 700-க்கு மேல் COVID-19 தொற்றுகளை பதிவு செய்த தமிழகம்...

இதுவரை, இந்த முழுமையான மருந்து கிட், 22000 காவல்துறையினர், 4000 தீயணைப்பு வீர்ர்கள் மற்றும் தாராவியில் வசிக்கும் 2000 பேர் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து, சைக்கோ நியூரோ எண்டோகிரைனை (Psycho Neuro Endocrine) பாதிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது

ஆயுஷ் அமைச்சகத்தால் சான்றளிக்கப்பட்ட ஆர்சனிக் ஆல்காம் மற்றும் M1 வகை கற்பூரம் ஆகியவை இந்த மருந்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மருந்தின் தேவை வெளிநாடுகளில் அதிகமாக இருக்கிறது.  
 
மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே இந்த மருந்தின் சிறப்பம்சம்.  இந்த மருந்தை 6 நாட்கள் பயன்படுத்தினால் போதும். ஆரம்பக்கட்டத்தில் சி.கே 1 என்ற மருந்தை முதல் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த மூன்று நாட்களுக்கு சி.கே 2 என்ற மருந்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இதையும் நாளொன்றுக்கு மூன்று முறை பயன்படுத்த வேண்டும். அதாவது இந்த மருந்தை ஒரு மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே எடுத்தால் போதுமானது.
 
கொரொனா (Coronavirus) பதற்றம் மிகுந்த இந்த காலகட்டத்தில், பெருமளவிலான புலம்பெயர்ந்த மக்கள், தங்கள் சொந்த மண்ணுக்கும், வேறு இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த மருந்து கொடுக்கலாம் என்று டாக்டர் ஷா கூறுகிறார். இதனால், கொரோனா வைரஸ் இந்த மக்களுக்கு பரவும் அபாயத்தை குறைக்கலாம். இந்த மருந்தின் விலை  15 முதல் 20 ரூபாய் தான் என்பது இந்த ஹோமியோபதி மருந்தின் சிறப்பம்சம்.
 
மேலும் படிக்க: முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டால் மற்றொரு மருத்துவ நெருக்கடி உண்டாகும்...

இந்தியாவில் கொரொனா தொற்றின் எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத ஏராளமான மக்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சோதனை செய்த செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 
 
அறிகுறியில்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், தொற்று துரிதமாக பரவும் வாய்ப்பும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம்.  எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஹோமியோபதி மருந்து மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும்.  
 
ஆயுஷ் அமைச்சின் உத்தரவின் பேரில், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றுடன் தொடர்புடைய மருத்துவர்களின் சேவையை பயன்படுத்தி வருவதாக மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே கூறுகிறார், இதற்காக இதுபோன்ற சுமார் 10 மருத்துவர்களைக் கொண்ட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக கூறுகிறார். ஹோமியோபதி மருத்துவம், சிறப்பாக பலனளிப்பதாக ராஜேஷ் டோபே தெரிவித்தார்.  
 
மேலும் படிக்க: COVID-19 தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கை பிரான்ஸ் அங்கீகரிக்கிறது!

கொரோனோ வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிரா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பணிக்குழுவில் டாக்டர் ஷாவும் உறுப்பினராக உள்ளார்.  இந்த பணிக்குழு, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறது. அறிகுறிகள் இல்லாத ஆனால் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் அழைப்பிற்கும், அவர்களுடைய சந்தேகங்களுக்கும் பதிலளிப்பது இந்த பணிக்குழுவின் பணியாகும். அதோடு, COVID-19 அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கொரோனாவின் தாக்கம் இல்லாதவர்களுக்கும் ஆலோசனையும்,  சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது. இது மாநில சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. 
 
இந்தியாவில் தான் அதிகமான ஹோமியோபதி கல்லூரிகள் உள்ளன என்பதும், பெரும்பாலவிலான மருத்துவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமல்ல, வெளிநாட்டில் 25 முதல் 30 டாலர் மதிப்பிற்கு  விற்பனையாகும், இந்த மருந்துகளின் விலை இந்தியாவில் மிகவும் குறைவு. அதனால்தான், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் பாரம்பரிய மருத்துவ முறை நல்ல பலனளிக்கிறது.

(செய்தி: மாலதி தமிழ்ச்செல்வன்)

Trending News