என்ஐடியில் 31,000 சம்பளத்தில் வேலை - முழு விவரம்

திருச்சி என்ஐடியில் வேலைவாய்ப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 9, 2022, 12:47 PM IST
  • என்ஐடியில் வேலை வாய்ப்பு
  • திருச்சி என்ஐடியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
 என்ஐடியில் 31,000 சம்பளத்தில் வேலை - முழு விவரம் title=

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (NIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Power Electronics / Power Systems பாடப்பிரிவில் M.E / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | IBPS RRB: வங்கியில் வேலை வேண்டுமா: உடனடியாக விண்ணப்பிக்கவும்

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

முன் அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியின்போது ரூ.31,000வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியத்துடன் 18% HRA (ரூ.36,580/- மொத்த ஊதியம்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் குறித்து தகுதியான விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைய இணைப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி: ஆர்பிஐ-ன் பெரிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20.06.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் அறிவிப்பில்  Dr.Shelas Sathyan, Department of Electrical and Electronics Engineering, National Institute of Technology Tiruchirappalli, Tamil Nadu-620015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News