ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நாடெங்கும் இலவச அரிசி ATM-கள்...

இலவச அரிசியை வழங்கும் ஒரு ATM இயந்திரம் - இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த இயந்திரம் இருப்பது உண்மை தான்...

Last Updated : Apr 14, 2020, 11:30 AM IST
ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நாடெங்கும் இலவச அரிசி ATM-கள்... title=

இலவச அரிசியை வழங்கும் ஒரு ATM இயந்திரம் - இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த இயந்திரம் இருப்பது உண்மை தான்...

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உதவ இந்த "அரிசி ATM-கள்" வியட்நாமைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

வியட்நாமில் இதுவரை 265 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன, மற்றும் பூஜ்ஜிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளை விட கணிசமாகக் குறைவு. என்றபோதிலும் நாட்டில் மேலும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, அரசாங்கம் சமூக தூரத்தை அமல்படுத்தியுள்ளது, பல சிறு வணிகங்களை திறம்பட மூடிவிட்டு ஆயிரக்கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இந்நிலையில் வருமானம் இன்றி தவிக்கும் இந்த மக்களுக்கு உதவும் வகையில், வணிகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் வியட்நாம் முழுவதும் பல நகரங்களில் இலவச அரிசியை விநியோகிக்கும் இயந்திரங்களை (அரிசி ATM) அமைத்துள்ளனர்.

ஹனோய் நகரில், ஒரு பெரிய நீர் தொட்டியில் உள்ள அரிசி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை குடியிருப்பாளர்களின் பைகளை நிறப்புகிறது. ஒவ்வொரு நாளும், இந்த செயல்பாடு நடைபெறுவதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் VNA தெரிவிக்கின்றது.

இந்த இயந்திரத்தில் அரசி பெற வரிசையில் காத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆறு அடி தூரத்தில் நிற்க வேண்டும், அவர்கள் அரிசி பெறுவதற்கு முன்பு கை சுத்திகரிப்பாளரைப் பயன்படுத்த வேண்டும் என்று உள்ளூர் செய்தித்தாள் ஹனோய் டைம்ஸ் தெரிவிக்கின்றது.

மத்திய நகரமான ஹியூவில், ஒரு கல்லூரியில் அமைந்துள்ள ஒரு அரிசி ATM உள்ளூர்வாசிகளுக்கு 2 கிலோகிராம் இலவச அரிசியை வழங்குகிறது. ஹோ சி மின் நகரில், ஒரு அரிசி ATM 24/7 நேரமும் அரிசியை விநியோகிக்கிறது. மேலும் டா நாங்கில், அடுத்த வாரம் இரண்டு அரிசி ATM-கள் அமைக்கப்படும் என்று VNA தெரிவித்துள்ளது.

Trending News