2020 ஏப்ரல் மாதம் முதல் நானோ காரின் விற்பனை நிறுத்தம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ காரின் விற்பனை வரும் 2020 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 28, 2019, 12:20 PM IST
2020 ஏப்ரல் மாதம் முதல் நானோ காரின் விற்பனை நிறுத்தம்! title=

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ காரின் விற்பனை வரும் 2020 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டாடா நிறுவனத்தின் நானோ கார் விற்பனை நிறுத்தம் செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக விற்பனையாகி வரும் டாடா நானோ விரைவில் தனது விற்பனையினை நிறுத்திக்கொள்ள இருப்பது நானோ ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த முடிவினை டாடா மோட்டார்ஸ் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
நான்கு அல்லது ஐந்து கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நானோ கார் அறிமுகம் ஆனது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ கார் வெறும் ரூ.1 லட்சத்திற்கு அறிமுகமாகி, உலகின் விலை குறைந்த கார் என்னும் பெயர் பெற்றது.

இந்தியாவில் பெரும்பாலானோர் வாங்கும் படி பட்ஜெட் விலையிலான கார் ஒன்றை வெளியிட விரும்பிய டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடாவின் முயற்சியால் நானோ கார் உருவானது. கடும் முயற்சிக்கு பின்னர் வெளியான இந்த கார் வெளியான சில தினங்களில் பெரும் புகழ் பெற்றது, எனினும் காரின் பாதுகாப்பு குறித்து அதிகளவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நானோ கார்களின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. 

எனினும் டாடா குழுமத்தின் தொடர் முயற்சி காரணமாக நானோ காரினை வெற்றிகரமான கார் மாடலாக சந்தைப்படுத்தினர். இந்நிலையில் தற்போது பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த காரின் உற்பத்தியினை டாடா நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது!

Trending News