டோல் பிளாசா விதிகள் மாற்றம்: நெடுஞ்சாலையில் பயணிப்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி!

வாகனத்திற்கும் டோலுக்கும் உள்ள உறவு, உணவு மற்றும் காய்கறிகள் இரண்டுக்கும் உள்ள உறவு போன்று. லாங் டிரைவ் போனால் கண்டிப்பாக டோல் டாக்ஸ் கட்ட வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2023, 12:56 PM IST
  • சுங்கச்சாவடிகளை வசூலிக்க 2 வழிகளை அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் கட்டப்படும்.
  • கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும்.
டோல் பிளாசா விதிகள் மாற்றம்: நெடுஞ்சாலையில் பயணிப்பவருக்கு மகிழ்ச்சியான செய்தி! title=

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது, சுங்க வரி பற்றி கவலைப்பட்டால், இப்போது உங்கள் கவலைகள் குறையலாம். கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்களை பாதிக்கும் சுங்கவரி வரி குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் கட்டப்படும் என்றும், அதே நேரத்தில் சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.  தொழில்நுட்பத்திலும் மாற்றம் ஏற்படும், பசுமை விரைவுச்சாலை கட்டப்பட்ட பிறகு, சாலைகள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா இருக்கும். இதனுடன், சுங்க வரி வசூலிக்கும் விதிகள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க | மத்திய அரசின் அசத்தல் திட்டம்... மாதம் ₹200 முதலீட்டில் ₹72,000 பென்ஷன் பெறலாம்

சுங்க வரியை வசூலிக்க அரசாங்கம் 2 வழிகளை செய்யலாம்

வரும் நாட்களில் சுங்கச்சாவடிகளை வசூலிக்க 2 வழிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில், கார்களில் 'ஜிபிஎஸ்' அமைப்புகளை நிறுவுவது முதல் விருப்பம். அதேசமயம், இரண்டாவது முறையில் சமீபத்திய நம்பர் பிளேட்டுடன் தொடர்புடையது. தற்போது அதற்கான திட்டமிடல் நடந்து வருகிறது. சுங்கவரி செலுத்தாதவர்களுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கப்படவில்லை. வரும் நாட்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கவரி வசூலிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும்

இதுவரை சுங்க கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறை இல்லை என்றும், ஆனால் கட்டணம் தொடர்பான மசோதா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் நிதின் கட்கரி மேலும் தெரிவித்துள்ளார். இப்போது டோல் வரி நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இதற்கு தனி நடவடிக்கை எடுக்கப்படாது. இனி நேரடியாக டோல் டாக்ஸ் செலுத்த வேண்டியதில்லை, உங்கள் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இது தவிர, மத்திய அமைச்சர் கூறுகையில்,'2019ல், கம்பெனி பொருத்திய நம்பர் பிளேட்களுடன் கார்கள் வரும் என விதியை வகுத்துள்ளோம். அதனால்தான் கடந்த நான்காண்டுகளில் வந்த வாகனங்கள் வெவ்வேறு நம்பர் பிளேட்களைக் கொண்டுள்ளன என்று கூறினார்.

தற்போது சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag -ஐ அறிமுகம் செய்தது. இதன் மூலம் மிக எளிதாக ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திவிடலாம். மணிக்கணக்கில் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பேடிஎம் வாலட்டில் பணம் இருந்தால் அல்லது பாஸ்டேக் அக்கவுண்டில் பணம் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் செலுத்தலாம். 

மேலும் படிக்க | பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்: வரி விலக்குடன் பல நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News