கடந்த வாரம் வெளியான புது படத்தின் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

தமிழில் '9 திருடர்கள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அகன்ஷா மோகன் என்பவர் நேற்று(செப்-30) ஒரு தனியார் ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 1, 2022, 08:59 AM IST
  • நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை.
  • மும்பை ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • தற்கொலைக்கான காரணத்தையும் எழுதி வைத்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான புது படத்தின் நடிகை தூக்கிட்டு தற்கொலை! title=

சமீப காலமாக இளம் வயதினர் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக திரை பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையான ஒன்றாக அரங்கேறி வருகிறது.  தற்போது மாடல் அழகியும், இளம் நடிகையுமான அகன்ஷா மோகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையை சேர்ந்த மாடல் அழகியான இவர் பல விளம்பரங்களிலும், சில ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார், '9 திருடர்கள்' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  தற்போது ஹிந்தியில் வெளியான சியா என்கிற திரைப்படத்தில் அகன்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், இந்த படம் வெளியாகி பதினைந்து தினங்களே ஆன நிலையில், இந்த இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திரையுலகினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

suicdie

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் - வேற லெவல் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க!

மும்பையின் வெர்சோவா பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் இவர் கடந்த புதன்கிழமையன்று இரவு 8 மணியளவில் இரண்டு நாட்கள் அறை எடுத்து தங்கியுள்ளார்.  இந்நிலையில் இரண்டு நாட்களாகியும் அகன்ஷா மோகன் அறையை விட்டு வெளியேறாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டினர், நீண்ட நேரம் கதவை தட்டியும் அறையின் உள்ளிருந்து எவ்வித பதிலும் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக காவல் துறைக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.  தகவல் கிடைத்து ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் அறையின் கதவை திறந்து பார்த்தபோது அகன்ஷா அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 

அகன்ஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.  விசாரணையில் அகன்ஷாவின் தற்கொலை கடிதம் போலீசாருக்கு கிடைத்தது, அதில் அவர் 'என்னை மன்னித்துவிடுங்கள், இதில் யாருக்கும் சம்மந்தம் இல்லை, நான் மகிழ்ச்சியாக இல்லை, எனக்கு அமைதி வேண்டும்' என்று எழுதியுள்ளார்.  லோகந்த்வாலாவில் உள்ள யமுனா நகரில் தனியாக வசித்து வந்த இவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் கதாபாத்திரப் பிணைப்பு: 360 டிகிரி பார்வை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News